News April 2, 2025
விருதுநகரில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று(ஏப்.2) முதல் ஏப்.4 வரை விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News April 11, 2025
பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் சிஎஸ்ஐ துவக்க பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி பணியிடை மரணம் அடைந்த முருகமணி என்பவரின் வாரிசுதாரராக அவரது மகள் எஸ்தர் சுகிர்தா என்பவருக்கு விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கான கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.
News April 10, 2025
விருதுநகர் எழுத்தாளருக்கு விருது

பாரதிய பாஷா விருது என்பது இந்திய இலக்கியத்திற்கான பங்களிப்பினை கௌரவிக்கும் வகையில் கொடுக்கப்படும் விருது. மேலும் இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்படும். தற்போது இந்த விருதானது நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கபடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.
News April 10, 2025
ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு நாளை திருக்கல்யாணம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்,ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக ஏப்.3 அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் வீதி உலா வந்து வெவ்வேறு மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனையடுத்து நாளை காலை 7.5 க்குசெப்பு தேரோட்டமும், மாலை 6.30 முதல் 7.30 க்கு ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.