News March 27, 2024
விருதுநகரில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு.. 492 பேர் ஆப்சென்ட்!

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று துவங்கி ஏப்ரல் 8 வரை நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை விருதுநகர் சிவகாசி இரு கல்வி மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற தமிழ் தேர்வில் 22,005 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால் 10,589 மாணவர்கள் 10,924 மாணவிகள் என 21,513 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 492 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
Similar News
News November 23, 2025
விருதுநகர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்<
News November 23, 2025
ஸ்ரீவி. நகராட்சி அலுவலகத்தில் பெண் ஊழியர் மீது தாக்குதல்

ஸ்ரீவில்லிபுத்துார் அசோக் நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் 38. இவரது தாயார் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் பணியாற்றி இறந்து போன நிலையில் அவரது பண பலன்களை பெற்றுத் தருமாறு கூறி நேற்று முன்தினம் காலை நகராட்சி அலுவலகத்தில் பணியில் இருந்த தூய்மை பணி மேற்பார்வையாளர் சிவகாமியை அசிங்கமாக பேசி பிளாஸ்டிக் சேரால் தாக்கியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர்.
News November 23, 2025
விருதுநகர்: இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்..!

ஸ்ரீவி – சிவகாசி ரோட்டில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த காளிராஜ் (21), வடபட்டியை சேர்ந்த தினேஷ்குமார் (21) ஆகியோர் மீது மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ரீல்ஸில், காளிராஜ், தினேஷ் ஆகிய இருவர் சாலையோரத்தில் சண்டையிடுவது போன்று ரீல்ஸ் எடுத்தனர். அப்போது டூவிலரில் வந்த ஒருவர் இவர்கள் சண்டையிடுவதை பார்த்து முன்னாள் சென்ற பேருந்தில் மோதி விபத்தில் சிக்கினார்.


