News August 4, 2024

விருதுநகரில் பிறந்த 7,991 குழந்தைகள், தாய் நலம்

image

விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி என 2 சுகாதார மாவட்டங்கள் உள்ளன. இதில் விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 22 ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. இதில் கடந்த ஏப்.2023 முதல் மார்ச்.2024 வரை மொத்தம் 7,991 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அனைத்து தாய் மற்றும் சேய் நலம் காக்கப்பட்டுள்ளது. 2022 – 23 அறிக்கைப்படி 8,483 குழந்தைகள் பிறந்ததில் 6 தாய்கள் உயிரிழந்துள்ளனர்.

Similar News

News November 17, 2025

விருதுநகர்: கோஷ்டி மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

image

அருப்புக்கோட்டை மறவர் தெருவை சேர்ந்தவர்கள் வினோத்குமார், விக்ரம், விமல், அழகர் ஆகியோர் உடைய ராஜனை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். வினோத்குமார் நண்பர் ராஜ்குமார் தகராறு செய்தவர்களிடம் கேட்ட போது ராஜ்குமாரை 4 பேர் அருவாளால் வெட்டியதில், மதுரை GH-யில் சேர்க்கப்பட்டார் போலீசார் இருதரப்பை சேர்ந்த அழகர், 25, விமல், 22, விக்ரம், 23, மற்றும் விஜயராஜ், 19, மாரிச்சாமி, 19, உள்ளிட்டவரை கைது செய்தனர்.

News November 17, 2025

பிளவக்கல் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

image

வத்ராப் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை மூலம் 17 வருவாய் கிராமங்களில் உள்ள 40 கண்மாய் நிரம்பி 7,219 ஏக்கர் விவசாய நிலம், பெரியாறு பிரதானக கால்வாய் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. தொடர் மழை காரணமாக 47 அடி கொண்ட பிளவக்கல் அணை 41 அடியை தாண்டியது. இதையடுத்து அணையில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு அமைச்சர் KKSSRR ராமச்சந்திரன் தண்ணீரை திறந்து வைக்கிறார்.

News November 16, 2025

விருதுநகரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்

image

விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் “அறிவும் வளமும்” என்ற பொருண்மையின் கீழ் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று(16.11.2025) பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

error: Content is protected !!