News August 4, 2024
விருதுநகரில் பிறந்த 7,991 குழந்தைகள், தாய் நலம்

விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி என 2 சுகாதார மாவட்டங்கள் உள்ளன. இதில் விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 22 ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. இதில் கடந்த ஏப்.2023 முதல் மார்ச்.2024 வரை மொத்தம் 7,991 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அனைத்து தாய் மற்றும் சேய் நலம் காக்கப்பட்டுள்ளது. 2022 – 23 அறிக்கைப்படி 8,483 குழந்தைகள் பிறந்ததில் 6 தாய்கள் உயிரிழந்துள்ளனர்.
Similar News
News October 18, 2025
விருதுநகர்: தீபாவளி லீவில் இதை மிஸ் பண்ணாதீங்க…

1.TNSTCல் 1,588 அப்ரண்டீஸ், https://nats.education.gov.in/ -ல் அக். 18க்குள் விண்ணப்பிக்கவும்
2.NLCல் 1,101 அப்ரண்டீஸ், https://www.nlcindia.in/website/en/ -ல் அக். 21க்குள் விண்ணபிக்கவும்
3.IITல் உள்ள 37 காலியிடங்கள், https://recruit.iitm.ac.in/ -ல் அக். 26க்குள் விண்ணப்பிக்கவும்.
4.பரோடா வங்கி 50 காலியிடங்கள், https://bankofbaroda.bank.in/ -ல் நவ. 30க்குள் விண்ணப்பிக்கவும். SHARE
News October 18, 2025
விருதுநகர்: ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்!

திருச்சுழி உடையனேந்தலை சேர்ந்தவர் மதிதயன். காரில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் இவர், நேற்று கல்குறிச்சியில் விற்பனை செய்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, காரியாபட்டி திருச்சுழி ரோட்டில் உடையனேந்தல் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென பெட்ரோல் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. கார் தீயில் கடும் சேதமடைந்தது.
News October 17, 2025
விருதுநகரில் தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக விருதுநகரில் அக். 20ம் தேதி தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.