News February 16, 2025
விருதுநகரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பிப்.21 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20 க்கும் மேற்பட்ட தனியார் பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அதற்கான இணையதளத்தில் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்து கல்வி சான்று, ஆதார் நகலுடன் கலந்து கொள்ளலாம்.
Similar News
News November 4, 2025
அருப்புக்கோட்டையில் 24 சவரன் கொள்ளை; சிறை

அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார்(40). இவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றபோது அவரது வீடு புகுந்து மர்மநபர் 24 1/2 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கடையலுருட்டியை சேர்ந்த செல்வகுமாரை கைது செய்து நேற்று(அக்.3) சிறையில் அடைத்தனர்
News November 4, 2025
விருதுநகர்: இளைஞர் குத்திக் கொலை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவிற்குட்பட்ட உவர்குளம் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவர் மகன் செந்தாமரைக்கண்ணன்(34). இவரை அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் மகன் கர்ணா என்பவர் முன்விரோதம் காரணமாக நேற்று இரவு குத்திக் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து நரிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 4, 2025
விருதுநகர்: மின்தடை பகுதிகள் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் துணைமின் நிலையத்தில் இன்று(நவ.4), படிக்காசுவைத்தான்பட்டி, மம்சாபுரம், தொட்டியப்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை(நவ.5) மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மேற்கண்ட துணைமின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. SHARE IT


