News February 16, 2025
விருதுநகரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பிப்.21 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20 க்கும் மேற்பட்ட தனியார் பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அதற்கான இணையதளத்தில் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்து கல்வி சான்று, ஆதார் நகலுடன் கலந்து கொள்ளலாம்.
Similar News
News December 3, 2025
ராஜபாளையம்: காவலர்கள் கொலையில் பாய்ந்த குண்டாஸ்

ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில் கடந்த நவ.11 அன்று இரு கோவில் பாதுகாவலர்களை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் கைதாகியுள்ள நாகராஜ் மற்றும் முனியசாமி ஆகியோர் மீது காவல் கண்காணிப்பாளர் கண்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
News December 3, 2025
விருதுநகரில் 9 புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

விருதுநகர் மாவட்டத்திற்கு புதிதாக இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்து மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் உத்தரவிட்டுள்ளார். தரம் உயர்த்தப்பட்ட பந்தல்குடி காவல் நிலையத்தில் முதல் இன்ஸ்பெக்டராக கிருஷ்ணவேணி பொறுப்பேற்றார். இதேபோல் மம்சாபுரம், ஆலங்குளம், கீழராஜகுலராமன், சிவகாசி நகர், எம்.புதுப்பட்டி, சாத்தூர் தாலுகா, வீரசோழன், ஏழாயிரம்பண்ணை ஆகிய காவல் நிலையங்களுக்கும் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News December 3, 2025
அருப்புக்கோட்டை: GH கட்டிடம் விரைவில் திறப்பு

அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் டயாலிசிஸ் வசதி, அறுவை சிகிச்சை அரங்குகளுடன் ரூ.34 கோடி மதிப்பில் ஆறு தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. பணிகள் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள கட்டிடம் சில நாட்களில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


