News March 26, 2025
விருதுநகரில் ஒரு அமானுஷ்ய கிராமம்

விருதுநகர் மாவட்டத்துல ஆளில்லாத ஒரு அமானுஷ்ய கிராமம் இருக்குன்னு சொன்னா அத நம்புவீங்களா? ஆமாங்க.. திருச்சுழி பக்கத்துல குச்சம்பட்டி அப்டிங்கிர ஒரு கிராமம். இங்க ஒரு வயதான தம்பதிய தவிர, வேற யாருமே இங்க இல்ல. ஆனா, முன்னாடி வாழ்ந்தவங்களோட வீடுகள் சிதிலமடைஞ்சு இருக்குறத பாக்க முடியும். இங்க சரியான வேலை இல்லாததால, இந்த கிராமத்த விட்டு போனதா சொல்றாங்க அந்த வயதான தம்பதி. கேக்கவே வித்தியாசமா இருக்குல.
Similar News
News December 2, 2025
அருப்புக்கோட்டை அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(36). கண்டெய்னர் லாரி ஓட்டுனரான ஜெயக்குமார் தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி லாரியை ஓட்டி சென்று கொண்டிருந்த போது அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் இன்று டிச.2 அதிகாலை லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ஜெயக்குமார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்
News December 2, 2025
விருதுநகர் அருகே வழுக்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி வேல்முருகன் காலனியை சேர்ந்தவர் முனியசாமி(25). இவர் அருகே உள்ள கோழிக்கறி கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று டிச.1 முனியசாமி கடையை கழுவி கொண்டிருந்த போது வழுக்கி விழுந்து காயம் அடைந்து மயங்கினார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முனியசாமி உயிரிழந்தார். டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
விருதுநகர்: 10th, 12th தகுதி.. மத்திய அரசு வேலை

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் <


