News August 17, 2024

விருதுநகரில் அதிகரித்து வரும் காலிப்பணியிடங்கள்

image

விருதுநகர் மாவட்டத்தில் மொத்த அரசு பேருந்துகளின் எண்ணிக்கை 449 ஆகும். இதன்படி, 1040 டிரைவர்கள் மற்றும் 960 நடத்துநர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பலர் பணி நிறைவு, வயது முதிர்வு காரணமாக விருப்ப ஓய்வு பெறுவதால், காலிப்பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. இதன்படி, மாவட்டத்தில், 150 டிரைவர்கள், 200 நடத்துநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனை, நிரப்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News November 20, 2025

விருதுநகர்: ஒரே நாளில் வெவ்வேறு விபத்துகளில் மூவர் பலி

image

தென்காசி, சிவகிரி சேர்ந்தவர் சுந்தர்ராஜ் 45, சங்கரன்கோவில் ரோட்டில் தனியார் மில்லில் பணி முடிந்து சாலையை கடந்த போது டூவீலர் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கொல்லங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் 45, தென்காசி ரோட்டில் டூவீலரில் வந்த போது மதுரையை சேர்ந்தவர் டூ வீலர் எதிரெதிரே மோதியதில் மகேஷ் உயிரிழந்தார். அதேபோல் சேத்துார் சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் 48 விபத்தில் பலியானார்.

News November 20, 2025

விருதுநகர்: 10th முடித்தால் உளவுத் துறையில் வேலை உறுதி..!

image

விருதுநகர் மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு10th தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். விவரங்களுக்கு <>CLICK <<>>செய்யவும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News November 20, 2025

விருதுநகர்: மூதாட்டி கொலை மருமகள் உட்பட 3 பேர் கைது

image

சிவகாசி அருகே செவலுாரை சேர்ந்தவர் லட்சுமி 64. இவரது மகன் பாலமுருகனுக்கும் 39, அதே பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் மகள் முருகேஸ்வரிக்கும் 39, 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டதில் முருகேஸ்வரி கோபித்து தாய் வீட்டிற்கு சென்றார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட சண்டையில் முருகேஸ்வரியின் தம்பி சங்கிலி பாண்டி 36, லட்சுமியை கட்டையால் அடித்ததில் நேற்று அதிகாலை இறந்தார்.

error: Content is protected !!