News August 17, 2024
விருதுநகரில் அதிகரித்து வரும் காலிப்பணியிடங்கள்

விருதுநகர் மாவட்டத்தில் மொத்த அரசு பேருந்துகளின் எண்ணிக்கை 449 ஆகும். இதன்படி, 1040 டிரைவர்கள் மற்றும் 960 நடத்துநர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பலர் பணி நிறைவு, வயது முதிர்வு காரணமாக விருப்ப ஓய்வு பெறுவதால், காலிப்பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. இதன்படி, மாவட்டத்தில், 150 டிரைவர்கள், 200 நடத்துநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனை, நிரப்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News October 22, 2025
விருதுநகரில் ஊராட்சி துறையில் வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் விருதுநகர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் இன சுழற்சி மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் நவ.9 க்குள் விண்ணப்பிக்கலாம். SHARE IT
News October 22, 2025
விருதுநகர்: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா..!

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 % முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) விருதுநகர் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 22, 2025
சிவகாசி அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி!

சிவகாசி அருகே உள்ள செவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணசுப்பு மனைவி சின்னம்மாள் (வயது 65). இவர் வீட்டில் உள்ள டியூப்லைட் எரியாத நிலையில் அதனை சரி பார்க்க முயன்ற போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சின்னம்மாளை பரிசோதனை செய்த டாக்டர், சின்னம்மாள் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.