News August 17, 2024

விருதுநகரில் அதிகரித்து வரும் காலிப்பணியிடங்கள்

image

விருதுநகர் மாவட்டத்தில் மொத்த அரசு பேருந்துகளின் எண்ணிக்கை 449 ஆகும். இதன்படி, 1040 டிரைவர்கள் மற்றும் 960 நடத்துநர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பலர் பணி நிறைவு, வயது முதிர்வு காரணமாக விருப்ப ஓய்வு பெறுவதால், காலிப்பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. இதன்படி, மாவட்டத்தில், 150 டிரைவர்கள், 200 நடத்துநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனை, நிரப்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News November 26, 2025

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் 13 லட்ச ரூபாய் காணிக்கை

image

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் வடபத்ரசயனா் சந்நிதி, நரசிம்மா் சந்நிதி உள்ளிட்ட 17 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தா்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. அறநிலையத் துறை உதவி ஆணையா் வளர்மதி தலைமையில் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில் 13 லட்சத்து 23 ஆயிரத்து 115 ரூபாய் 51 கிராம் தங்கம் உள்ளிட்டவை கிடைத்தது.

News November 26, 2025

விருதுநகர்: 12th தகுதி.. ரூ.21,700 சம்பளத்தில் வேலை உறுதி!

image

விருதுநகர் மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.19,900 – 21,700 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 26, 2025

ஸ்ரீவி., சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 3 ஆண்டு சிறை

image

ஸ்ரீவில்லிபுத்துார் பகுதி வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான முத்துப்பாண்டி (39). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக அச்சத்தை ஏற்படுத்தி தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!