News August 15, 2024
விருதுநகரில்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் அருகே சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் நாளை (ஆக.16) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 20 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலைநாடுபவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 19, 2025
பள்ளி மாணவர்களுக்கு நெகிழி தீமை குறித்து விழிப்புணர்வு

அருப்புக்கோட்டை நகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகர தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக இன்று வெள்ளக்கோட்டை செங்குந்தர் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு நெகிழி தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கி நெகிழி பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News November 19, 2025
அருப்புக்கோட்டையில் கடைகள் ஏலம் ஒத்திவைப்பு

அருப்புக்கோட்டையில் ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஸ்மார்ட் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் அந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் இன்று (நவ.19) நகராட்சி அலுவலகத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
விருதுநகர்: ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வே வேலை

விருதுநகர் மக்களே, ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 முதல் 33 வயதுகுட்பட்டவர்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளைக்குள் (நவ. 20) <


