News April 22, 2025

விருதாச்சலம் அருகே கால்வாயில் விழுந்து குடிமகன் உயிரிழப்பு 

image

விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (40)  என்பவர் நேற்று குடிபோதையில் விருதாச்சலம் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றபோது, கழிவுநீர் கால்வாயில் தடுமாறி தலைகுப்புற விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விருதாச்சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் கால்வாயில் விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News December 3, 2025

கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

image

புவனகிரியை அடுத்த சாத்தப்பாடி கிராமத்து சேர்ந்தவர் வேலு(23), இவர் 17 வயதுடைய சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அச்சிறுமி கர்ப்பமானாதல் துகுறித்து மேல் புவனகிரி ஊராட்சி ஊர் நல அலுவலர் அருளரசி கொடுத்த புகாரின் பேரில், சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் வாலிபர் மீது நேற்று போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 3, 2025

குறிஞ்சிப்பாடி: தீயில் கருகி பெண் உயிரிழப்பு

image

குறிஞ்சிப்பாடி அடுத்த சமட்டிக் குப்பத்தை சேர்ந்தவர் காசிராஜன் மனைவி வன்னிய மலர்(37). இவர் தனது வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த போது, நைட்டியில் தீப்பட்டு உடல் முழுவதும் பற்றி எரிந்தது. இதில் படுகாயம் அடைந்த வன்னியமலர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News December 3, 2025

கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!

error: Content is protected !!