News April 22, 2025
விருதாச்சலம் அருகே கால்வாயில் விழுந்து குடிமகன் உயிரிழப்பு

விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (40) என்பவர் நேற்று குடிபோதையில் விருதாச்சலம் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றபோது, கழிவுநீர் கால்வாயில் தடுமாறி தலைகுப்புற விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விருதாச்சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் கால்வாயில் விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News December 6, 2025
கடலூர்: BE படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6.கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 6, 2025
கடலூர் மாவட்ட மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 6) காலை 8.30 மணி நிலவரப்படி சிதம்பரம் 42.6 மில்லி மீட்டர், சிதம்பரம் 33 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 29.8 மில்லி மீட்டர், லால்பேட்டை 23 மில்லி மீட்டர், புவனகிரி 21 மில்லி மீட்டர், கடலூர் 12.5 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 242.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News December 6, 2025
கடலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க


