News April 22, 2025

விருதாச்சலம் அருகே கால்வாயில் விழுந்து குடிமகன் உயிரிழப்பு 

image

விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (40)  என்பவர் நேற்று குடிபோதையில் விருதாச்சலம் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றபோது, கழிவுநீர் கால்வாயில் தடுமாறி தலைகுப்புற விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விருதாச்சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் கால்வாயில் விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News December 21, 2025

போராட்டத்தில் ஈடுபட்ட 35 விவசாயிகள் மீது வழக்கு

image

கடலூர் அடுத்த கொடுக்கன்பாளையம், மலைஅடிகுப்பம் ஊராட்சியில் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் நேற்று தொடங்கினர். இந்நிலையில் இன்று (டிச.21) நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 35 பேர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News December 21, 2025

கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

image

கடலூர் மக்களே.. பட்டாவில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 21, 2025

விருத்தாசலத்தில் வந்தே பாரத் நின்று செல்ல அனுமதி

image

சென்னை- திருநெல்வேலி இடையே  இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் இனி விருத்தாசலத்தில் நின்று செல்லும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்  உறுதி அளித்துள்ளார். தொழில்  மற்றும் பணி நிமித்தமாக, விரைவான  பயணத்தை மேற்கொள்ள வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்ல வேண்டுமென்ற விருத்தாசலம் பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று ரயில்வே அமைச்சகம்  இந்த அறிவிப்பை  வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!