News August 14, 2024
விராலிமலை அருகே 8 பேர் கைது

மலைக்குடிப்பட்டியில் 10க்கும் மேற்பட்டோர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இலுப்பூர் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பணம் வைத்து சூதாடிய ராசு (51) கந்தசாமி (56) நல்லதம்பி (72) அண்ணாமலை (48) பச்சையப்பன் (63) தங்க பழனியாண்டி (72) வேலு (65) செல்வம் (56) உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். இருவர் தப்பியோடினர்.
Similar News
News November 17, 2025
புதுகை: மழையா? இதை மறக்காதீங்க!

புதுகை மக்களே, தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கி தரப்படும்! SHARE
News November 17, 2025
புதுகை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

திருமயம் அருகே மணவாளக்கரை சேர்ந்த விஜயன் 58, அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமான நிலையில் அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் திருமயம் அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து முதியவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 17, 2025
புதுகை: மது அருந்திவிட்டு அட்டூழியம் செய்தவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் ஈபி அலுவலகம் அருகே, பெரியசாமி (38) என்பவர் நேற்று மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாத்தூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் மாத்தூர் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி பிணையில் விடுவித்தனர்.


