News September 14, 2024

விரல் உடைத்த போலீஸ் மீது பாதிக்கப்பட்டவர் புகார்

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தெற்கு பாளையத்தை சேர்ந்தவர் அருள் பிரசாத். இவர் பனியன் தொழிலாளி. இவருக்கும் அருகில் வசிக்கும் முத்தம்மாள் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக அருண் பிரசாத்திடம் விசாரிக்க பல்லடம் போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது அருண் பிரசாத்தை போலீசார் தாக்கியதில் சுண்டுவிரல் உடைந்து விட்டதாக மனித உரிமை கவுன்சிலிடம் நேற்று புகார் அளித்துள்ளார்.

Similar News

News December 6, 2025

திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.06) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், சின்னக்கரை, இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், சின்னாண்டிபாளையம் கிழக்கு, இடுவாய் கிழக்கு, வஞ்சிபாளையம், சின்னியக்கவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 6, 2025

இரவு ரோந்து போலீசார் பணி விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (5.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி, குடிமங்கலம், செய்யூர், ஊதியூர், வெள்ளகோவில் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News December 5, 2025

திருப்பூரில் ஆச்சர்யம்

image

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சனை எழுந்துள்ள நிலையில், மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் திருப்பூரில் உள்ள தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்ற வருவது ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

error: Content is protected !!