News September 14, 2024

விரல் உடைத்த போலீஸ் மீது பாதிக்கப்பட்டவர் புகார்

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தெற்கு பாளையத்தை சேர்ந்தவர் அருள் பிரசாத். இவர் பனியன் தொழிலாளி. இவருக்கும் அருகில் வசிக்கும் முத்தம்மாள் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக அருண் பிரசாத்திடம் விசாரிக்க பல்லடம் போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது அருண் பிரசாத்தை போலீசார் தாக்கியதில் சுண்டுவிரல் உடைந்து விட்டதாக மனித உரிமை கவுன்சிலிடம் நேற்று புகார் அளித்துள்ளார்.

Similar News

News December 18, 2025

கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய வாலிபர் கைது!

image

காங்கேயம் பஸ் நிலையத்தில் இன்று மாலை கல்லூரி மாணவி பேருந்திற்கு காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் வந்த மனைவியிடம் அத்துமீறினார். தொடர்ந்து மாணவி கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை காங்கேயம் போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன்(35) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

News December 18, 2025

ரூ.30,000 பரிசு: திருப்பூர் மக்களே ஜாக்கிரதை

image

திருப்பூர் மாவட்ட போலீசார் சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை பதிவு செய்தனர். அதில், 2025 ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கப்படும் என்றும் அதற்கு லின்ங்-கை கிளிக் செய்ய வேண்டும் என பரப்பப்படுகிறது. திருப்பூரில் மக்களே அதை பயன்படுத்த வேண்டாம். அது தங்களது தனிப்பட்ட விவரங்களை திருடும் மர்ம நபர்கள் அனுப்பும் மோசடி தகவல் ஆகும் என தெரிவித்துள்ளனர்.

News December 17, 2025

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (டிச.17) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

error: Content is protected !!