News April 5, 2025

விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மதுரை விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்து பின்னர் தனி விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் காவல்துறையினரின் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுகிறது.

Similar News

News December 5, 2025

மதுரை மாநகராட்சி ஊழியர் வலிப்பு ஏற்பட்டு பலி.!

image

மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த பிளம்பராக இருந்தவர் ராஜா 50. மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் பகுதி கழிவு நீர் கால்வாய் அருகே அவர் நடந்து சென்ற போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 5, 2025

மதுரை அருகே பெண் தற்கொலையில் சந்தேகம்…!

image

வெள்ளலூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி அன்னக்கிளி(35). முத்துக்குமார் துபாயில் வேலை பார்த்து வருவதால் தனது மகள் முத்துலட்சுமி(10), சிவா(7) மற்றும் மாமியாருடன் அன்னக்கிளி வாசித்து வந்தார். அவர் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்த கீழவளவு போலீசார், உயிரிழப்புகான காரணம் குறித்து இன்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

News December 5, 2025

JUSTIN திருப்பரங்குன்றம் வழக்கு ஒத்திவைப்பு

image

திருப்பரங்குன்றம் விசாரணையை வரும் 10-ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்த நிலையில் வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க அரசு தரப்பு கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு 12-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும், விரும்புவர்கள் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் வெள்ளிக்கிழமைக்கு பிறகு புதிதாக வரும் மனுக்கள் ஏற்கப்படாது என்று இருநீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

error: Content is protected !!