News October 25, 2024
விமான நிலையத்தில் பேஸ்ட் வடிவிலான தங்கம் கடத்தல்

சிங்கப்பூரில் இருந்து இன்று திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடைமையில் பேஸ்ட் வடிவிலான 24 கேரட் தங்கம் 234 கிராம் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு 18 லட்சத்து 24 ஆயிரத்து 30 ரூபாய் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….
Similar News
News October 24, 2025
திருச்சி: ஆளை விழுங்கிய கடன்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் எலக்ட்ரீசியன் கடை நடத்தி வரும் ஜோசப் ராஜ் என்பவர் கடன் பிரச்சனை காரணமாக நேதாஜி நகரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 23, 2025
திருச்சி: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் குறித்த அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (அக்.24) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மணப்பாறை 11, 23 ஆகிய வார்டுகளிலும், திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை பகுதியிலும், மணிகண்டம் கோனார் சத்திரம் பகுதியிலும், முசிறி ஏவூர் பகுதியிலும், மணப்பாறை ஆலகவுண்டம்பட்டி பகுதியிலும், மருங்காபுரி ஊனையூர் பகுதியிலும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 23, 2025
திருச்சி: வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி திருமழபாடி சாலையில் சேகர் என்பவர் வீட்டின் மேல் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு இருந்துள்ளது. இதனை கண்ட சேகர் புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று பாம்பை உயிருடன் மீட்டு, வனப்பகுதியில் விட்டனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது


