News October 25, 2024

விமான நிலையத்தில் பேஸ்ட் வடிவிலான தங்கம் கடத்தல்

image

சிங்கப்பூரில் இருந்து இன்று திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடைமையில் பேஸ்ட் வடிவிலான 24 கேரட் தங்கம் 234 கிராம் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு 18 லட்சத்து 24 ஆயிரத்து 30 ரூபாய் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

Similar News

News November 28, 2025

திருச்சி: புயல் அவசர உதவி எண்கள்!

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம்- 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் – 1077 ஐ அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News November 28, 2025

திருச்சியில் தலைதூக்கிய புதிய மோசடி

image

திருச்சியை சேர்ந்த கலைவாணி என்கிற பெண்ணின் ஆதார் மற்றும் பான்கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அந்நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி அபராத தொகையாக ரூ.9 கோடி கட்ட வேண்டும் எனவும், அந்த தொகையை கலைவாணி தான் கட்ட வேண்டுமென, அவர் கணக்கு வைத்துள்ள வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த கலைவாணி திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

News November 28, 2025

திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி டவுன் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் செல்ல மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓயாமரி வழியாக மார்க்கெட் செல்லும் இலகுரக வாகனங்கள் மட்டும் ஓடத்துறை மேம்பாலம் வழியாக சிந்தாமணி பஜார், சங்கரன்பிள்ளை சாலை வழியாக செல்லலாம். இபி ரோடு வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் பழைய பால்பண்ணை, மார்க்கெட் வழியாக செல்லலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!