News August 11, 2024

விமான நிலையத்தில் சுற்றித்திரிந்த 34 நாய்களுக்கு தடுப்பூசி

image

சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையம் பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அந்த தெரு நாய்கள் விமான பயணிகள், போலீசார், ஊழியர்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் விமான நிலையங்களை சுற்றித்திரிந்த 34 நாய்களை பிடித்து அவற்றிற்கு தடுப்பூசிகள் செலுத்தினர்.

Similar News

News December 1, 2025

JUST IN: சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

‘டிட்வா’ புயல் காரணமாக நாளை (டிச.2) காலை 8 மணி வரை சென்னையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க!

News December 1, 2025

FLASH: ‘டிட்வா’ புயல்; சென்னைக்கு இன்று ரெட் அலெர்ட்!

image

‘டிட்வா’ புயல் காரணமாக சென்னையில் கடந்த 7 மணி நேரத்திற்கும் மேலாக, கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னைக்கு இன்றும் நாளையும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், 20 செ.மீ கனமழை பெய்யும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நாளை பள்ளிக்கு விடுமுறை விடப்படுமா? என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

News December 1, 2025

சென்னை: ஊர்க்காவல் படையில் சேர நல்வாய்ப்பு!

image

சென்னை , பெருநகர ஊர்காவல் படைக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது 18-50-க்குள் இருக்கும் ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தகுதி உடையவர்கள், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்காவல் படை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று, டிச.15க்குள் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, 91760 99249 / 74186 81700 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!