News August 14, 2024
விமான டிக்கெட் கட்டணங்கள் 2 மடங்கு உயர்வு

சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை செல்லும் விமான டிக்கெட் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. சுதந்திர தினம், வாரயிறுதி விடுமுறையை முன்னிட்டு டிக்கெட் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.4,301 ஆக இருந்த கட்டணம் ரூ.10,796 ஆகவும், மதுரைக்கு ரூ.4,063 ஆக இருந்த கட்டணம் ரூ.11,716 ஆகவும், திருச்சி கட்டணம் ரூ.7,192 ஆகவும், கோவை ரூ.5,349 ஆகவும் உயர்ந்துள்ளது.
Similar News
News November 24, 2025
JUST IN: சென்னையில் சார்பதிவாளர் அதிரடி கைது!

சென்னையில் போலி ஆவணம் மூலம் நிலம் பத்திரப்பதிவு செய்ததாக சென்னை அம்பத்தூர் சார்பதிவாளர் ஜாபர் சாதிக்கை இன்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மாதவரத்தில் சார்பதிவாளராக பணியாற்றிய போது போலியாக நிலம் பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக புகார் வந்த நிலையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோதே ஜாபர் சாதிக்கை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை கைது செய்தது.
News November 24, 2025
நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி!

அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான நத்தம் விஸ்வநாதன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
News November 24, 2025
BREAKING: சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

சென்னையில் வரும் 29ஆம் தேதி கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 48 மணிநேரத்தில் புயல் உருவாக உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நவ.29ஆம் தேதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே!. ஷேர் பண்ணுங்க.


