News April 10, 2025
விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓடினால்.. தண்டனை தெரியுமா?

விபத்தை ஏற்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அதுபோல விபத்து ஏற்படுத்திவிட்டு போலீசிடம் தகவல் தெரிவிக்காமல் வாகனத்தை நிறுத்தாமல் செல்வதும், தப்பி ஓடுவதும் குற்றம்தான். இதுகுறித்து பிஎன்எஸ் சட்டத்தின் 106(2)வது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு அபராதத்துடன் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News December 2, 2025
கரூர் துயர வழக்கை CBI விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு

கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை CBI விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில்(SC) தவெக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழக அரசு நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு(SIT) விசாரணை தொடர அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. SC உத்தரவின்பேரில் CBI அதிகாரிகள் ஒரு மாதமாக கரூரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 2, 2025
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக IMD தெரிவித்துள்ளது. இது சென்னைக்கு 30 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது இன்று இரவு சென்னை – பாண்டிச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
News December 2, 2025
தூங்காமல் நான் காணும் சொப்பனமே..

சில்லென்ற காற்றாய் வந்து, கனவாய் கலைந்த சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் இன்று. நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில், அந்தக்கால 80ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமல்ல, 90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் என ஜெனரேஷன் கடந்தும் கனவுக்கன்னியாக இருக்கிறார் சில்க். தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் பலரும் இவரின் கால்ஷீட்டுக்காக தவம் கிடந்த காலமும் உண்டு. உங்களுக்கு பிடித்த சில்க் ஸ்மிதா பாட்டு எது? COMMENT IT.


