News April 10, 2025

விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓடினால்.. தண்டனை தெரியுமா?

image

விபத்தை ஏற்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அதுபோல விபத்து ஏற்படுத்திவிட்டு போலீசிடம் தகவல் தெரிவிக்காமல் வாகனத்தை நிறுத்தாமல் செல்வதும், தப்பி ஓடுவதும் குற்றம்தான். இதுகுறித்து பிஎன்எஸ் சட்டத்தின் 106(2)வது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு அபராதத்துடன் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE IT.

Similar News

News November 14, 2025

தலைகீழாக மாற்றம்… அடுத்தடுத்து ட்விஸ்ட்

image

பிஹாரில் 2020-ஐ ஒப்பிடுகையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் நிலை தலைகீழ் சரிவை கண்டுள்ளது. ஆரம்பத்தில் கடும்போட்டி நிலவிய நிலையில், 9 மணிக்கு மேல் NDA கூட்டணியின் முன்னிலை ஜெட் வேகத்தில் எகிறியது. தற்போது NDA கூட்டணி 196 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், MGB கூட்டணி வெறும் 39 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதில் தனித்து BJP -89, JDU – 79 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

News November 14, 2025

நேருவின் பிறந்தநாளில் சறுக்கிய காங்கிரஸ்!

image

சுதந்திர இந்தியாவின் பெரும் அரசியல் ஆளுமையான இந்தியாவின் முதல் PM நேருவின் பிறந்தநாள் இன்று. ஆனால், அவரின் பெருமைகளை நினைவுகூரும் நிலையில், காங்கிரஸ் கட்சி இல்லை. இன்று வெளியாகி வரும் பிஹார் தேர்தல் முடிவில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் MGB கூட்டணி 39 இடங்களில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது, காங்., 4 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. நேரு பிறந்தநாள், அவருடைய கட்சிக்கு சோக நாளாக மாறியுள்ளது!

News November 14, 2025

பிஹார் வெற்றி WB-லிலும் தொடரும்: கிரிராஜ் சிங்

image

பிஹாரில் NDA கூட்டணி 191 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், இந்த வெற்றி பாஜகவுக்கே உரியது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார். இந்த வெற்றி, தற்போது அராஜக ஆட்சி நடைபெறும் மே.வங்கத்திலும் தொடரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். CM மம்தா பானர்ஜி தலைமையிலான TMC ஆட்சி நடைபெறும் அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

error: Content is protected !!