News October 25, 2024
விபத்து ஏற்படாமல் தீபாவளி கொண்டாடுங்கள்: கலெக்டர்

அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் என காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். வழிபாட்டுத் தளங்கள், மருத்துவமனைகள், அமைதி காக்க கூடிய இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும், குடிசை மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம். விபத்து ஏற்படாமல் தீபாவளி கொண்டாடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News September 19, 2025
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்வெளியிட வாக்காளர் பதிவு அலுவலர் முருகானந்தம் பெற்று கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ உள்ளார்.
News September 18, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.18) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
குண்டுப்பெரும்பேடு ஏரியின் கல்வெட்டு திறப்பு

இன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், டைட்டன் நிறுவனம் மற்றும் தேசிய வேளாண் நிறுவனம் இணைந்து புணரமைக்கப்பட்ட குண்டுப்பெரும்பேடு ஏரியின் கல்வெட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் திறந்து வைத்தார். உடன் டைட்டன் நிறுவன துணைத்தலைவர் ரேவதி காந்த், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருள்மொழி, உதவி செயற்பொறியாளர் மார்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.