News June 25, 2024
விபத்தில் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் கதவாளம் ஊராட்சியில் உதவி ஆசிரியரக பணியாற்றி வருபவர் மஞ்சுளா. இவர் இன்று காலை மாதனூர் உதவி கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சிக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது கதவாளம் அருகே டூவிலரில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்தார்.
Similar News
News December 1, 2025
திருப்பத்தூர்: பெண் விபரீத முடிவால் மரணம்!

ஆம்பூர் பர்ணக்கார பகுதியை சேர்ந்த தன்வீரி மனைவி ஆசியா பர்வீன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆசியா பர்வீன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 1, 2025
திருப்பத்தூர்: 2,147 செவிலியர் பணியிடங்கள்.. நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 1, 2025
திருப்பத்தூர்: விபத்தில் தாய் மகள் இருவரும் பலி!

ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரியை சேர்ந்தவர் வேலாயுதம், பத்மா (65). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இவரது மகள் ரீத்தா என்பவர் தனது மொபட் டில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த நவ.25ம் தேதி அழைத்து சென்றார். அப்போது திரியாலம் பகுதியில் மொபட் தவறி விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் நேற்று (நவ.30) பத்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


