News August 24, 2024
விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நிவாரணம்

தமிழகம் முழுவதும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் விபத்து நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அணைக்கட்டு தாலுகாவில் விபத்தில் இறந்த 40 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஆர்டிஓ பங்கேற்று நிவாரண தொகையை வழங்கினார்.
Similar News
News November 14, 2025
வேலூர்: INOX-இல் சூப்பர் வேலை!

வேலூரில் இயங்கி வரும் செல்வம் ஸ்கொயரில் உள்ள PVR-INOX சினிமாவில் Operations Associate பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் அனுபவத்திற்கு ஏற்றாற்போல சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு 40 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நவம்பர். 30ம் தேதிக்குள் இந்த <
News November 14, 2025
வேலூர்: சடலத்தை ஆற்றில் தூக்கி செல்லும் அவலம்!

குடியாத்தம் மூங்கப்பட்டு ஊராட்சியில் வசிக்கும் கிராம மக்களுக்கு கவுண்டன்ய மகாநதி ஆற்றோரம் சுடுகாடு உள்ளது. மழையால் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளம் செல்வதால், சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஆற்று தண்ணீரில் மூழ்கியது. அந்த கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் இறந்த நிலையில், நேற்று (நவ.13) மாலை அவருடைய உடலை அடக்கம் செய்ய ஆற்றோரத்தில் சேறும் சகதியும் நிறைந்த பாதையில் கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
News November 14, 2025
வேலூர்: பள்ளி மாணவன் மின்னல் தாக்கி பலி

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அடுத்த பொய்கை சேர்ந்தவர் ஜீவித்(18).இவர் தனியார் கல்லூரியில் பி ஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் (நவ.13)அன்று அவரது வயலில் இருந்த பசு மாடுகளை அழித்து வர சென்ற போது திடீரென மின்னல் தாக்கி கீழே சுருண்டு விழுந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


