News August 24, 2024
விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நிவாரணம்

தமிழகம் முழுவதும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் விபத்து நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அணைக்கட்டு தாலுகாவில் விபத்தில் இறந்த 40 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஆர்டிஓ பங்கேற்று நிவாரண தொகையை வழங்கினார்.
Similar News
News December 2, 2025
வேலூரில் 76 சதவீதம் பணிகள் நிறைவு.. அதிகாரிகள் தகவல்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை 12 லட்சத்து 92 ஆயிரம் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளுக்கான கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைவருக்கும் படிவம் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. அதேபோன்று பூர்த்தி செய்யப்பட்ட 9 லட்சத்து 93 ஆயிரம் கணக்கீட்டு படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இது 76 சதவீதமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News December 2, 2025
வேலூரில் கொடூர விபத்து!

வேலூர்: அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட அகரம் ராமாநாயணிகுப்பம் கிராமத்தில் நேற்று (டிச.1) வயலுக்கு சென்ற அப்பா இரண்டு மகன்கள் ஆகிய மூவரும் வயலுக்கு வைத்திருந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 2, 2025
வேலூர் மாவட்ட இரவு ரோந்துப் பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.01) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.


