News October 23, 2024

விபத்தில் கல்லூரி மாணவி பரிதாப உயிரிழப்பு

image

விழுப்புரம் மாவட்டம் ரெட்டியார் மில் பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கல்லூரி மாணவி கவிநிஷா (19) நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர் சிபிராஜுடன் பைக்கில் சென்றபோது, இந்த விபத்தானது நடந்துள்ளது. படுகாயம் அடைந்த சிபிராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News December 9, 2025

விழுப்புரம்: கணவரின் அலட்சிய செயலால் மனைவி மரணம்!

image

விழுப்புரம் அடுத்த உலகலாம்பூண்டியை சேர்ந்தவர் பரந்தாமன் இவர் தனது மனைவி மாலாவுடன் கடந்த 3-ஆம் தேதி பைக்கில் சொந்த வேலை காரணமாக விழுப்புரம் சென்று கொண்டிருந்தனர். அப்போது தென்னமாதேவி பகுதியில் வேகத்தடையில் பரந்தாமன் பைக்கை வேகமாக ஓடியுள்ளார், இதனால் மனைவி மாலா தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மாலா உயிரிழந்தார். போக்குவரத்து விதியை மீறி சென்றது, உயிரிழப்பு என்று பரந்தாமன் மீது வழக்கு பதிவு.

News December 9, 2025

விழுப்புரம்: 11-ம் வகுப்பு மாணவி ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை

image

வைரபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது 16 வயது மகள் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆறு மாதமாக வயிற்று வலி இருந்து வந்த நிலையில் கடந்த 7-ஆம் தேதி வீட்டில் இருந்த ஜன்னல் கம்பியில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 9, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (டிச.8) இரவு முதல் இன்று (டிச.9) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!