News April 1, 2025
விபத்தில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை – எஸ்.பி தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்து உயிரிழப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருவதாக எஸ்.பி. ஸ்டாலின் இன்று (ஏப்.01) தெரிவித்தார். விபத்து உயிரிழப்புகள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டம் என்ற காவல்துறையின் குறிக்கோளை அடைய காவல்துறை எடுக்கும் முன்னெடுப்புகள் மற்றும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Similar News
News April 9, 2025
கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

பண்டிகையை கால கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சேலம், நாமக்கல், மதுரை வழியாக சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ. எண் 06089 ) ஏப்ரல் 10 &17 ஆகிய இரு தினங்களிலும் சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரி புறப்படும் மறுமார்க்கத்தில் (வ.எண் 06090 ) ஏப்ரல் 11 & 18 கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் என அறிவிப்பு. *ஷேர் பண்ணுங்க
News April 9, 2025
குமரி மாவட்டத்தின் புவிசார் குறியீடு பெற்ற 3 பொருட்கள்

மாறாமலை கிராம்பு (இந்தியாவில் மொத்த கிராம்பு உற்பத்தியில் 750 டன் குமரியில் உற்பத்தி செய்யப்படுகிறது.
மட்டி வாழைப்பழம் (தென் திருவிதாங்கூர் மலைகளில் மட்டுமே வளரும் ஒரு அரிய வகை வாழை)
ஈத்தாமொழி நெட்டைத் தென்னை (இந்த ரகத்தின் தேங்காய், 700கி.கி எடையும், எண்ணெய் சத்து அதிகமாக இருப்பதால், மதிப்பு கூட்டியும் விற்பனை செய்யலாம்) *தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
News April 9, 2025
தோவாளை : இன்றைய மலர்கள் விலை விபரம்

குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இன்றைய (ஏப்.09) விலை நிலவரம். 1 கிலோ பிச்சி ரூ.1100, மல்லி ரூ.600, சம்பங்கி ரூ.250, அரளி ரூ.320, வாடாமல்லி ரூ.60, கிரேந்தி ரூ.70, கோழிக்கொண்டை ரூ.60, துளசி ரூ.30, பன்னீர் ரோஜா ரூ.150, மஞ்சள் செவ்வந்தி ரூ.240, வெள்ளை செவ்வந்தி ரூ.340, மரிக்கொழுந்து ரூ.70, தெத்தி ரூ.100 க்கும் விற்பனை செய்யப்பட்டது.