News August 10, 2024

வினாடி வினா போட்டிக்கு அழைப்பு

image

போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கான மாநில அளவிலான வினாடி வினா போட்டி விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. ‘சங்க இலக்கியமும் திருக்குறளும்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் https://forms.gle/CN4ey1H6Lqsdyex18 என்ற இணையத்தில் வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News December 6, 2025

சிவகாசி: பல்கலை சான்றிதழை அச்சடித்த மூவர் கைது

image

சிவகாசியில் உள்ள தனியார் அச்சகத்தில் கேரள மாநிலம் மலப்புரத்தில் இயங்கி வரும் பிரபல பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் போலியாக அச்சடிக்கப்படுவதாக கேரளா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த புகாரின் பேரில் சிவகாசியில் உள்ள அச்சகத்தில் கேரளா மாநிலம் மலபுரம் போலீசார் திடீர் சோதனை நடத்தி போலி சான்றிதழ் அச்சடிப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அச்சகத்தில் பணியாற்றி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

News December 6, 2025

விருதுநகர்: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்ட இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. இங்கே <>கிளிக்<<>> செய்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நல்ல சம்பளத்தில் உடனே IT வேலைக்கு செல்லுங்கள். நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News December 6, 2025

விருதுநகர் அருகே ரூ.15 லட்சம் மோசடி

image

வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் கீழக்கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த பாண்டி, பெருமாளம்மாள், ஈஸ்வரி, ராணி, விஜயகரிசல்குளத்தை சேர்ந்த சூரியகலா ஆகியோர் போலி நகையை அடகு வைத்து ரூ.15.94 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சாத்துார் ஜே. எம் 2 நீதிமன்ற உத்தரவுப்படி வெம்பக்கோட்டை போலீசார் பாண்டியை கைது செய்து மற்ற 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!