News August 26, 2024
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

ப.வேலூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி (ம) வண்ணம் பூசும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. காமதேனு விநாயகர், பாம்பின் மீது அமர்ந்து செல்லும் விநாயகர், தாமரை மீது அமர்ந்த விநாயகர், பஞ்சமுக விநாயகர், மும்மூர்த்தி விநாயகர், மயில்வாகனத்தில் அமர்ந்து செல்வது போன்ற விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News November 17, 2025
நாமக்கல்: இரவு நேர ரோந்து அலுவல் குறித்த விபரம்!

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாள்தோறும் இரவு நேர ரோந்து பணி ஈடுபடும் அலுவலர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இரவு நேர ரோந்து செல்லும் காவல்துறை அதிகாரிகள் குறித்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியில் செல்லும் போது மக்கள், தங்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News November 16, 2025
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 6-ஆக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.95 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில், இன்றைய தினம் 5 காசுகள் உயர்வடைந்து ரூ. 6.00 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளிர்காலம் தொடங்கியுள்ளதால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. எனவே முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த வரலாறு காணாத முட்டை விலை உயர்வால், கோழிப்பண்ணையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News November 16, 2025
நாமக்கல்: நான்கு சக்கர ரோந்து காவலர்கள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.16) நாமக்கல் – (தங்கராஜ் – 9498170895), வேலூர் – (மோகனாகுமார் – 9498168518), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் – (கெளரிசங்கர் – 8973319946), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.


