News August 26, 2024
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

ப.வேலூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி (ம) வண்ணம் பூசும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. காமதேனு விநாயகர், பாம்பின் மீது அமர்ந்து செல்லும் விநாயகர், தாமரை மீது அமர்ந்த விநாயகர், பஞ்சமுக விநாயகர், மும்மூர்த்தி விநாயகர், மயில்வாகனத்தில் அமர்ந்து செல்வது போன்ற விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News November 19, 2025
புதுச்சத்திரம் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே, ஏ.கே. சமுத்திரத்தை சேர்ந்தவர் மணி, 60; தனியார் நிறுவனத்தில், இரவு நேர காவலாளி. இவர், நேற்று முன்தினம் காலை, பாச்சல் பிரிவில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து. புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
News November 19, 2025
நாமக்கல்: நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.19) நாமக்கல் – (தங்கராஜ் – 9498170895), வேலூர் – (சுகுமாரன் – 875402021), ராசிபுரம் – (சின்னப்பன்- 9498169092), திருச்செங்கோடு – (பெருமாள்- 9498169222), திம்மநாயக்கன்பட்டி – (ரவி – 9498168665) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News November 18, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (18.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


