News August 26, 2024
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

ப.வேலூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி (ம) வண்ணம் பூசும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. காமதேனு விநாயகர், பாம்பின் மீது அமர்ந்து செல்லும் விநாயகர், தாமரை மீது அமர்ந்த விநாயகர், பஞ்சமுக விநாயகர், மும்மூர்த்தி விநாயகர், மயில்வாகனத்தில் அமர்ந்து செல்வது போன்ற விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News November 30, 2025
நாமக்கல்லில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

பள்ளிபாளையம் டிஎஸ்பி கெளதம் உள்ளிட்ட போலீசார் நேற்று மதுபான கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக ஜீவா செட் பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடை சோதனையிட்டபோது அனுமதி இல்லாமல் 247 மது பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது .இதனை எடுத்து சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கோபி கண்ணன் என்பவரை கைது செய்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News November 30, 2025
நாமக்கல் அருகே பஸ் மோதி விபத்து: ஒருவர் பலி

பள்ளிப்பாளையம் அருகே, ரங்கனுார் பகுதியை சேர்ந்தவர் குருவன், 55; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு அப்பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த அரசு பஸ், குருவன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குருவனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, நேற்று அதிகாலை இறந்தார். பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 30, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


