News August 24, 2024
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள்

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்றக் கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்படும் விநாயகர் சிலைகள் எண்ணிக்கை, அவற்றை பாதுகாப்பது, குறித்த நேரத்தில் பாதுகாப்பாக எடுத்துச் சென்று கரைப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
Similar News
News October 16, 2025
திருவாரூர்: ஆட்சியர் தலைமையில் கல்வி மீளாய்வு கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (அக்டோபர் 15) மாலை பள்ளி கல்வித்துறையின் சார்பில், திருவாரூர் மாவட்ட கல்வி மீளாய்வு கூட்டமானது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
News October 16, 2025
திருவாரூர்: சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் அரசு அனுமதி பெறாமல் நடத்தப்படும் பட்டாசு கடைகள் மற்றும் தயாரிப்பு கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், வலங்கைமான் அருகே மாஞ்சேரியைச் சேர்ந்த ராஜபாண்டியன் (35) என்பவர் வீட்டில் அனுமதி பெறாமல் பட்டாசு தயாரித்து வந்தது தெரியவந்ததையடுத்து, போலீசார் 800 கிலோ பட்டாசுகள், 3 கிலோ வெடி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
News October 15, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (அக்.15) இரவு முதல் நாளை (அக்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!