News August 24, 2024
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள்

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்றக் கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்படும் விநாயகர் சிலைகள் எண்ணிக்கை, அவற்றை பாதுகாப்பது, குறித்த நேரத்தில் பாதுகாப்பாக எடுத்துச் சென்று கரைப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
Similar News
News December 7, 2025
திருவாரூர் ரயில் நிலையத்தில் தீவிர பரிசோதனை

திருவாரூர் ரயில் நிலையத்தில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு நினைவு நாளான நேற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி பயணிகள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் போலீசார் ரயில் நிலைய நுழைவாயில் தளங்களில் பயணிகளிடம் தீவிரமாக பரிசோதனை நடத்தினார்கள். மேலும், உடமைகள் அனைத்தும் மேற்பார்வை செய்யப்பட்டது.
News December 7, 2025
திருவாரூர்: பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News December 7, 2025
திருவாரூர் மாவட்டத்தின் மழை அளவு

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. குறிப்பாக திருவாரூர், கோட்டூர், ராயநல்லூர், பல்லவராயன், கட்டளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் காலை 6 மணி அளவில் 57 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


