News August 25, 2024
விநாயகர் சதுர்த்தியில் 1008 சிலைகள் வைக்க தீர்மானம்

மேலூரில் அகில பாரத இந்து மகா சார்பில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மேலூர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாநில விவசாய அணி தலைவர் ரமேஷ் பாண்டியன், மாநில தலைவர் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் பெரி. செல்லத்துரை தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மேலூர் தாலுகாவில் ஒரு அடி முதல் ஒன்பதரை அடி வரை 1008 விநாயகர் சிலைகள் வைப்பது என்பது உட்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Similar News
News December 12, 2025
மதுரை : SIR-ல பெயர் இருக்கா இல்லையா? CHECK பண்ணுங்க!

மதுரை மக்களே, நீங்க கொடுத்த எஸ்ஐஆர் படிவத்தில் 2026 வோட்டர் லிஸ்ட்-ல் உங்க பெயர் சேர்த்தாச்சா இல்லையா? என்பதை உங்க போன்-லே பார்க்கலாம்.
1.இங்கு <
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவு செய்ங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையேன்றால் உங்க BLO அதிகாரியை தொடர்பு கொள்ளுங்க.SHARE பண்ணுங்க.
News December 12, 2025
மீனாட்சி அம்மன் கோவிலில் நடை திறப்பு மாற்றம்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகின்ற டிசம்பர் 16ம் தேதி முதல் ஜனவரி 15 2026 வரை நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்கழி திருப்பள்ளியெழுச்சியை முன்னிட்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படும் பிறகு 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 12, 2025
மதுரை: சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் பரிதாப பலி

மதுரை உசிலம்பட்டி அருகே எழுமலையைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் செல்வபாண்டி, விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில், நேற்று (டிச. 11) மாலை மைத்துனர் அருண்குமாருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, முத்துராமலிங்க தேவர் கல்லூரி அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உசிலம்பட்டி போலீசார் தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.


