News October 24, 2024

விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.5,000 அபராதம்!

image

சென்னை மாநகராட்சி பகுதிகளில், பெருமளவு திடக்கழிவு கொட்டுவோர் விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சி சார்பில் ஆய்வுக்காக வரும்போது, குப்பை சேகரிப்பாளர்கள் அல்லது மறுசுழற்சி செய்பவர்கள் மூலம் குப்பைகள் அகற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் காண்பிக்க வேண்டும். உரிய விதிகளைப் பின்பற்றாமல் விதிமீறலில் ஈடுபடுவோருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணுங்க

Similar News

News November 14, 2025

சென்னை: முதல் கணவர் பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை

image

சென்னை வானகரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், முதல் கணவரை பிரிந்து 2வதாக திருமணம் செய்து கொண்டார். அவர் முதல் கணவருக்கு பிறந்த 2 மகள்களிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி பிரிந்து சென்ற தங்களது தந்தையிடம் கூறினர். உடனே அவர், மகள்களுடன் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது மனைவி மற்றும் அவரது 2வது கணவர் மீது புகார் அளித்துள்ளார்.

News November 14, 2025

சென்னையில் E-வாகன சார்ஜிங் POINT

image

சென்னை மாநகராட்சி, நகரில் மின்சார வாகன (EV) பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல பொது இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங், மைலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்கா, அண்ணா நகர் பூகெய்ன்வில்லா பூங்கா, தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா, தி.நகர் விளையாட்டு மைதானம், அம்பத்தூர் மங்கள் ஏரி பூங்காவில் நிலையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

News November 14, 2025

சென்னை: டிகிரி/ டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!

image

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் Sales Consultant பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு டிகிரி/ டிப்ளமோ முடித்த 22- 30 வயது உடைய ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.20,000 – ரூ.25,000 வழங்கப்படும். இந்த பணிக்கு 1-3 வருடம் அனுபவம் அவசியம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க. சென்னையில் வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!