News January 2, 2025

விதிகளை பின்பற்றதாத நிறுவனங்கள் மூடப்படும் – சிவகங்கை

image

சிவகங்கை: சுற்றுச்சூழல் வனம் & சூழல் மாறுபாடு அமைச்சகம், மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றுவதற்காக மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016-ஐ அறிவித்துள்ளது. எனவே மருத்துவ கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள், மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். இல்லையேல், நிறுவனங்களை மூடி அபராதம் விதிக்கப்படும் – ஆட்சியர்
*ஷேர்*

Similar News

News August 11, 2025

சிவகங்கை:20கி.மீ துரத்திய அதிகாரிகள்; கவிழ்ந்த கடத்தல் லாரி

image

ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக சிவகங்கை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காரைக்குடி அருகே கல்லூர், கீழாநிலைக்கோட்டையில் நேற்று வாகன சோதனை மேற்கொண்ட போது, மினி லாரி ஒன்று தப்பி ஓடியது. 20 கி.மீ. தூரம் விரட்டிய போலீசார், கருவியபட்டி அருகே சென்ற போது லாரி கவிழ்ந்தது. லாரியை மீட்டு, 1.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். ஓட்டுநர் தப்பியோடியதால், அவரை தேடி வருகின்றனர்.

News August 10, 2025

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (10.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 10, 2025

சிவகங்கை: சரியாக சம்பளம் கொடுக்கவில்லையா..?

image

சிவகங்கை மக்களே நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். தொழிலாளர் இணை ஆணையர் – 04575-240521, தொழிலாளர் துணை ஆணையர் – 04575-240320 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.

error: Content is protected !!