News April 27, 2025

விண்ணமங்கலத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் மரணம்

image

திருக்காட்டுப்பள்ளி விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த சம்பத் மகன் யோகேஷ் (16). தனது பிறந்தநாள் அன்று வீட்டில் உள்ள குளியல் அறையில் மின்மோட்டாரை இயக்கியுள்ளார். எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News October 19, 2025

தஞ்சை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது.

News October 19, 2025

தஞ்சை: அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு

image

திருச்சியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்( 52). இவர் திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று விட்டு அங்கு உள்ள மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நடுப்படுகை தெற்கு வாய்க்கால் கரை தெருவை சேர்ந்த குட்டி என்ற பிரவீன் (28), பாலகிருஷ்ணனை வழிமறித்து அரிவாளைக் காட்டி மிரட்டி அவர் கையில் இருந்த ரூ.500-ஐ பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் காவல்துறையினர் பிரவீனை கைது செய்தனர்.

News October 19, 2025

தஞ்சை: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

image

தஞ்சை மாவட்டத்தில் 91 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK செய்க.<<>>
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!