News April 11, 2025

விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ் 21- 24 வயதிற்குட்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு இணையதளத்தில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பயிற்சிக்காலத்தில் 12 மாதங்களுக்கு உதவித்தொகையாக மாதத்திற்கு ரூ.5000 வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க ஏப்.15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News November 27, 2025

சிவகாசி அருகே வீட்டில் பீரோவை உடைத்து நகை கொள்ளை

image

சிவகாசி ரிசர்வ் லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் அழகர் 50. ஆடு, கோழிகள் வளர்த்து கறிக்கடை தொழில் செய்து வருகிறார். இவரிடம் கோவில்பட்டி அன்னை தெரசா நகரை சேர்ந்த முத்துலட்சுமி 45, வேலை செய்து வந்தார்.இந்நிலையில் அழகர் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது முத்துலட்சுமி வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 3 பவுன் தங்கச் செயின், நான்கரை பவுன் கம்மலை திருடினார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 27, 2025

விருதுநகர்: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க.
மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News November 27, 2025

விருதுநகர்: வாளியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

image

நத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (38). இவரது மனைவி வைதேகி. இவர்களது 2-வது குழந்தை கிருத்வீகா முத்ரா(2)வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வைதேகி பால் வாங்க சென்றிருந்தார். அப்போது குழந்தை கிருத்வீகா முத்ரா பாத்ரூமில் உள்ள தண்ணீர் வாளியில் விளையாடிய போது, தண்ணீரில் தலைகுப்புற விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நத்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!