News August 16, 2024

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் சுதந்திர தினத்திற்கு விடுமுறை வழங்கப்படுகிறதா? என்பது குறித்து தனியார் நிறுவனங்களில் நேற்று (ஆகஸ்ட் 15) ஆய்வு நடத்தப்பட்டது. அதன் பெயரில் மாவட்டம் முழுவதும் உள்ள 89 தனியார் நிறுவனங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படவில்லை என தெரியவந்தது. அந்த நிறுவனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Similar News

News November 13, 2025

தூத்துக்குடி: இயந்திரத்தில் சிக்கி பெண் பலி

image

தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தை சேர்ந்த சுடலைமணி – ராணி தம்பதியினர் அப்பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கான்கிரீட் போடும் பணிக்கு இருவரும் சென்று வந்தனர். அப்போது நாசரேத் பகுதியில் நடைபெற்ற தரைப்பாலம் கட்டும் பணிக்கு சென்றபோது நேற்று மாலை ராணி சிமெண்ட் கலக்கும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 13, 2025

தூத்துக்குடி: நபார்டு வங்கியில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை

image

தூத்துக்குடி மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள பல்வேறு Customer Service Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 12 – 33 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ. 15க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு இல்லை. இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க.

News November 13, 2025

SIR படிவங்களை நிரப்புவதற்காக சிறப்பு முகாம்

image

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள SIR கணக்கெடுப்பில், படிவங்களை விநியோகம் செய்யும் பணி நவ.4 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நவ.11 மாலை 4 மணியளவில் 70% கணக்கெடுப்பு படிவங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் படிவங்களை நிரப்புவதற்காக நவ.15 & 22 தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என தூத்துக்குடி தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!