News March 25, 2025
விடுதி மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சிவகங்கை மாவட்டம் 2025-26ஆம் ஆண்டிற்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ / மாணவியர்கள் சேர்க்கைக்கு வருகின்ற 06.04.2025 ஆம் தேதிக்குள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, ஆடுகள தகவல் தொடர்பு மையத்தினை 95140 00777 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
JUST IN: சிவகங்கை பள்ளிகளுக்கு விடுமுறையா.? விளக்கம்

தமிழகத்தில் நாளை (நவ.29) சனிக்கிழமையன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டதாக பரவிய தகவல் தவறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. பள்ளிகள் விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவர் என்றும், தற்போது பரவிய தகவல் உண்மையில்லை என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
BREAKING சிவகங்கையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நாளை (நவ.29) சனிக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ‘டித்வா’ புயல் எச்சரிக்கை காரணமாக, மாணவர்கள் நலன் கருதிமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் எந்த விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
News November 28, 2025
சிவகங்கை மாவட்டத்தில் 12,144 நாய்களுக்கு தடுப்பூசி

சிவகங்கை மாவட்டம், சமூக நாய்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் தற்போது வரை மாநகராட்சி அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் 12,144 எண்ணிக்கையிலான சமூக நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கும் ARV தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி, இன்று தெரிவித்துள்ளார்.


