News March 28, 2025
விடுதியில் சேர ஏப்.6 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில், 2025ம் ஆண்டு சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கு, மாநில அளவிலான தேர்வு போட்டி வரும் ஏப்ரல் 8 ம் தேதி நடக்கிறது. இதில், சேர்வதற்காக, www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும், 6 தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 17 வயது நிரம்பிய பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
கரூரில் பைக் தடுமாறி சாலை விபத்து!

கரூர்: ஜெகதாபி அருகே ஆனந்த கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வசிகாமணி (70) என்பவர், உப்பிடமங்கலம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி விழுந்து படுகாயமடைந்தார். இதனையடுத்து கரூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது மனைவி கமலா ராணி அளித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 15, 2025
கரூர்: குளித்தலை அருகே பைக் மோதி நடந்து சென்றவர் காயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர் பள்ளி மாணவர் திருக்குமரன் (52) நேற்று ராஜேந்திரம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்ற போது, பின் தொடர்ந்த தினேஷ் என்பவரின் பைக் மோதி, அவருக்கு இடது காலில் கடும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, திருக்குமரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். உறவினர் பூங்கொடி புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 14, 2025
கரூர்: ரூ.25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

கரூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 52, Office assistant admin பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். SSLC முடித்திருந்தால் போதும்.மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <