News August 25, 2024
விஜய் வசந்த் எம்.பி-க்கு நன்றி தெரிவித்த மக்கள்

“குமரி மாவட்டத்தில் வாணியக்குடி மீனவர் கிராமத்தில் துறைமுகப் பணியை உடனே தொடங்க வேண்டும்” என கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அந்தப் பணியை தொடங்கினால் மீனவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய விஜய் வசந்துக்கு ஊர் மக்கள் சார்பில் நேற்று சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.
Similar News
News July 11, 2025
குமரியில் விஷ ஜந்து கடித்து கொத்தனார் உயிரிழப்பு

திருவட்டார் அருகே தச்சக்குடி விளையை சேர்ந்த கொத்தனார் சதீஷ்(37). திருமணமாகாத இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த ஜூலை.07 தேதியன்று அருகில் உள்ள வயலில் மயங்கிய நிலையில்
கிடந்தவரை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சதீஷ் உயிரிழந்தார். இதுக்குறித்து திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News July 11, 2025
கன்னியாகுமரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் ஜூலை.26 அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 113 நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இங்கே <
News July 11, 2025
குமரியில் சிவில் சப்ளை அலுவலகத்தில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் அமைந்துள்ள சிவில் சப்ளை அலுவலகத்தில் இன்று (ஜூலை.10) தமிழ்நாடு உணவு வழங்கும் துறை ஆணையத்தின் தலைவர் சுரேஷ் ராஜன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள அவருடன் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.