News August 25, 2024
விஜய் வசந்த் எம்.பி-க்கு நன்றி தெரிவித்த மக்கள்

“குமரி மாவட்டத்தில் வாணியக்குடி மீனவர் கிராமத்தில் துறைமுகப் பணியை உடனே தொடங்க வேண்டும்” என கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அந்தப் பணியை தொடங்கினால் மீனவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய விஜய் வசந்துக்கு ஊர் மக்கள் சார்பில் நேற்று சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.
Similar News
News September 15, 2025
விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட இனி ஆன்லைன்

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.30 ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து நுழைவு சீட்டு பெறும் வசதியை விவேகானந்த கேந்திரம் செப்.11-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தி உள்ளது. yatra.com என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 2 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்யலாம் என விவேகானந்தா கேந்திர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News September 15, 2025
மார்த்தாண்டம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவர்

காஞ்சிரகோடு அருகே இலியான் விளையைச் சேர்ந்தவர் கஸ்தூரி (50). இவரது கணவர் குடிபோதையில் இவருடன் சண்டை போட்டு உள்ளார். அப்போது அவர் கத்தியால் கஸ்தூரி கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கஸ்தூரி உயிரிழந்த நிலையில் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஸ்தூரி உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 14, 2025
குமரி மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

தற்போது வாட்ஸ்அப்பில் RTO Traffic Challan.apk அல்லது SBI Aadhar Update.apk என்ற பெயரில் தெரிந்த அல்லது தெரியாத நம்பரிலிருந்து பதிவிறக்கம் செய்வதற்கான apk file வந்தால் உடனடியாக அதை தவிர்த்து விடுங்கள். அதை பதிவிறக்கம் செய்தால் உங்கள் புகைப்படங்கள், வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ள நேரிடும். இது போன்ற குற்றங்களில் சிக்கிக் கொண்டால் 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு எண்ணை அழைக்கலாம்.