News August 25, 2024
விஜய் வசந்த் எம்.பி-க்கு நன்றி தெரிவித்த மக்கள்

“குமரி மாவட்டத்தில் வாணியக்குடி மீனவர் கிராமத்தில் துறைமுகப் பணியை உடனே தொடங்க வேண்டும்” என கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அந்தப் பணியை தொடங்கினால் மீனவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய விஜய் வசந்துக்கு ஊர் மக்கள் சார்பில் நேற்று சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.
Similar News
News November 27, 2025
குமரி: கணவர் அடித்தால் CALL பண்ணுங்க!

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. கணவன் தொல்லை, குடும்ப வன்முறை, வேலைத்தளங்களில் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளை நடந்தால் பெண்கள் உடனடியாக 181 உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை காக்க 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படுகிறது. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News November 27, 2025
குமரி: 8-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

களியக்காவிளை அருகே காரக்கோணத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு வந்த நிலையில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வெள்ளறடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
News November 27, 2025
நீர்வளத்துறை அலுவலகத்தில் மரங்கள் ஏலம் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் செருப்பலூர் கிராமத்தில் நீர்வளத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மரங்கள் குறித்த ஏல அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தேக்கு மரம் 33, அயனி மரம் 3, பலாமரம் 2, மாமரம் 7, புளிய மரம் 2, வாதுமை மரம் 1 மற்றும் வாகை மரம் 1 ஆகியவை ஏலம் விடப்பட இருக்கிறது. ஏலம் டிச. 9 அன்று நடைபெற உள்ள நிலையில் விருப்பமுள்ளவர்கள் டிச.8 க்குள் பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.


