News August 25, 2024

விஜய் வசந்த் எம்.பி-க்கு நன்றி தெரிவித்த மக்கள்

image

“குமரி மாவட்டத்தில் வாணியக்குடி மீனவர் கிராமத்தில் துறைமுகப் பணியை உடனே தொடங்க வேண்டும்” என கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அந்தப் பணியை தொடங்கினால் மீனவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய விஜய் வசந்துக்கு ஊர் மக்கள் சார்பில் நேற்று சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.

Similar News

News October 15, 2025

குமரி: சுகாதார துறையில் வேலை ரெடி! கலெக்டர் அறிவிப்பு

image

குமரி ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கன்சல்டன்ட் ஆயுர்வேதா 2, யுனானி 1, யோகா மற்றும் நேச்சுரபதி 2 , மெடிக்கல் ஆபிசர் சித்தா 1, ஓமியோபதி 1 என்று 2 பணியிடங்கள் என மொத்தம் 18 பணியிடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை 28ம்தேதிக்குள் சுகாதார அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE

News October 15, 2025

குமரி: ரேஷன் கடைகளில் ஆட்சியர் திடீர் சோதனை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் அழகு மீனா திடீர் ஆய்வு மேற்கொண்டார் கல்குளம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு நியாய விலை கடைகளுக்குச் சென்ற அவர் அங்கு உணவுப் பொருட்களை இருப்பு குறித்து ஆய்வு செய்தார் பின்னர் சரியான எடையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறதா என்பதை அவர் ஆய்வு செய்தார்.

News October 14, 2025

ஆளூர் அருகே ரெயில் மோதி ஒருவர் பலி

image

குமரி, இரணியல் – ஆளூருக்கு இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று (அக்.13) ஒரு முதியவர் ரெயிலில் அடிப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, இறந்தவர் ஆலுவிளையை சேர்ந்த அல்லிராஜ் (வயது 90) என்பதும், தண்டவாளம் அருகே நடந்து சென்றபோது அவர் மீது ரெயில் மோதியதும் தெரியவந்தது.

error: Content is protected !!