News January 22, 2025
விஜயை கூட்டணிக்கு அழைக்கவில்லை: செல்வபெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர் விஜய் அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றியே பேசி வருகிறார். எங்களது கொள்கையுடன் இணைந்து அவர் செயல்படுவதால் இந்தியா கூட்டணியில் வந்து சேர்ந்து விடலாம் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். ஆனால் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஒரே கொள்கையுடன் இருப்பதால் அவ்வாறு கூறினேன் என்றார்.
Similar News
News December 6, 2025
ஈரோட்டில் கோடி கணக்கில் மோசடி: அதிர்ச்சி

ஈரோடு திருநகர் காலனி பகுதியில் தனியார் சங்கம் சார்பில் அதன் கணக்காளர் ராஜேந்திரன் என்பவர் ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பல லட்சங்களை முதலீடு செய்த நிலையில், பணத்தை திரும்பத் தராமல் ரூ.4 கோடி மோசடி செய்ததோடு ராஜேந்திரன் தலைமறைவாகியுள்ளார். இதுதொடர்பாக ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கேட்டு புகார் அளித்துள்ளனர்.
News December 6, 2025
பெருந்துறை: 18 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை அதிரடி தீர்ப்பு!

பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக வெளிநாட்டினா் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், பெருந்துறை காவல் ஆய்வாளா் தெய்வராணி தலைமையிலான போலீஸாா் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி அங்கு சென்று விசாரணை நடத்தினா். அதில் சட்ட விரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 18 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
News December 6, 2025
ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்ட காவல்துறை, நேற்று (05/12/2025) இரவு நேர சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற தடுப்பு பணிக்காக ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பொதுமக்களுக்கு அவசர உதவி தேவையானால், பொது அவசர எண் 100, சைபர் கிரைம் உதவி 1930, குழந்தைகள் உதவி 1098 ஆகிய எண்களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.


