News October 25, 2024

விசைப்படகு உரிமையாளர்களுக்கு டீசல் மானியம்

image

புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி அரசின் திட்டத்தின்கீழ் 2024-25 நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டிற்கு அதாவது ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2024 மாதங்களுக்கு புதுச்சேரி பகுதியை சேர்ந்த 100 பதிவு பெற்ற விடைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய மீதம் உள்ள டீசல் மானிய தொகை இன்று அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றார்.

Similar News

News November 12, 2025

புதுவை: மாணவர்களுக்கு நிதி உதவி அரசாணை வெளியீடு

image

புதுச்சேரி, முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியில், பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவித் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு சுமார் ₹ 27.84 கோடி நிதியுதவி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 10% அரசு இட ஒதுக்கீட்டில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும், இந்த நிதியுதவி விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

News November 12, 2025

புதுச்சேரி: முதலாம் உலகப் போரின் நினைவு தினம்!

image

முதலாம் உலக போரின் 109ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி இன்று (12.11.2025) காரைக்காலில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள நினைவு தூண் முன்பு அனுசரிக்கப்பட்டது. இந்தியாவிற்கான பிரான்ஸ் நாட்டுத் தூதர் தியரி மாத்தூ, புதுவைக்கான துணை தூதர் எட்டியென் ரோலண்ட் பியக், மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் தூதரக அதிகாரிகள், பிரஞ்சு குடியிரிமை மக்கள் கலந்து கொண்டனர்.

News November 12, 2025

புதுச்சேரி: கவர்னர் முன்னிலையில் ஒப்பந்தம்

image

புதுச்சேரி அரசு, சுற்றுலாத்துறை மற்றும் பிரான்ஸ் நாட்டில் உள்ள சென்ட்ரல் வால் தி லோயர் மாகாணம் இடையில் கலாச்சாரப் பரிமாற்றம், கல்வி மற்றும் ஆராய்ச்சி, வேளாண்மை மற்றும் உணவுத்துறை மேலாண்மை, இந்தோ-பிரெஞ்சு கூட்டுறவு, உணவு மற்றும் பாரம்பரியம் சார்ந்த திருவிழா கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆளுநர் மாளிகையில், நேற்று (நவ.11) துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முன்னிலையில் நடைபெற்றது.

error: Content is protected !!