News April 20, 2025

விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!

image

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சாமிநாதன் கயல்விழி, பவன்குமார் க.கிரியப்பனவர் ஆகியோர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கூலி உயர்வு பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

Similar News

News November 23, 2025

கோவை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கோவை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News November 23, 2025

காரமடை அருகே விபத்து: ஒருவர் பலி

image

காரமடையை அடுத்த பிரஸ்காலனி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனது காரில் நண்பர் நிஷாந்த் என்பவருடன் நேற்றிரவு கட்டாஞ்சி மலை வழியாக தோலம்பாளையம் சென்றுள்ளார். தோலம்பாளையம் புதூர் அருகே கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர புளிய மரத்தின் மோதியதில் கோவிந்தராஜ் பலியானார். நிஷாந்த் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 23, 2025

காந்திபுரத்தில் பாலியல் தொழில்! சிக்கிய 3 பேர்

image

கோவை, காந்திபுரம் ராம்நகரில் தனியார் விடுதியில் வெளிமாநில இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வந்தது. காட்டூர் போலீசார் ரகசிய தகவலின் பேரில் நேற்று சோதனை நடத்தி, நேபாளைச் சேர்ந்த அதிராம் சவுத்ரி(31), உத்தரபிரதேசத்தை சேர்ந்த கிஞ்சால்(24), ஹரியானாவை சேர்ந்த யசோதா(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதனையடுத்து பெண்களை காப்பகத்திற்கு அனுப்பினர்.

error: Content is protected !!