News August 11, 2024

விசாரணைக்கு ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன்

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணைய விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக, கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்றவர்களுக்கு சம்மன் அனுப்பி தினசரி 10 பேரை அழைத்து விசாரித்து வந்தனர். இதுவரை 150 பேரிடம் விசாரணை முடிந்துள்ள நிலையில், முதற்கட்ட விசாரணைக்கு ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News December 15, 2025

கள்ளக்குறிச்சி: ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நீலமங்கலம் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்தை இன்று (15.12.2025) நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். இந்த நிகழ்வின் போது பள்ளியின் முதல்வர் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

News December 15, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..

image

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில், இன்று பெண் ஒருவர் தனது மகன், மருமகளுடன் வந்து உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை தடுத்து நிறுத்தி விசாரித்ததில், கந்து வட்டிக்கு கடன் வாங்கிய நிலையில், முழு தொகையையும் திருப்பி அளித்தும் மேலும் பணம் கேட்டு ஒருவர் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

News December 15, 2025

கள்ளக்குறிச்சி: EB பில் நினைத்து கவலையா??

image

கள்ளக்குறிச்சி மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவியுங்க.ஷேர்!

error: Content is protected !!