News August 11, 2024

விசாரணைக்கு ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன்

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணைய விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக, கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்றவர்களுக்கு சம்மன் அனுப்பி தினசரி 10 பேரை அழைத்து விசாரித்து வந்தனர். இதுவரை 150 பேரிடம் விசாரணை முடிந்துள்ள நிலையில், முதற்கட்ட விசாரணைக்கு ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News October 19, 2025

கள்ளக்குறிச்சி: இலவச GAS சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க

News October 19, 2025

கள்ளக்குறிச்சி: தீபாவளி பண்டிகையொட்டி 600 போலீசார் பாதுகாப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏ.டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் 6 டி.எஸ்.பி.,க்கள், 18 இன்ஸ்பெக்டர்கள், 114 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், 340 காவல் நிலைய போலீசார், 40 ஆயுதப்படை போலீசார், 60 பட்டாலியன் போலீசார் உட்பட மொத்தம் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News October 19, 2025

கள்ளக்குறிச்சி: காவல்துறை சார்பாக எச்சரிக்கை

image

திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என டிஎஸ்பி பார்த்திபன் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தீபாவளி அன்று பொதுமக்களை பாதிக்கும் வகையில் இளைஞர்கள் வாகனங்களில் அதிவேகமாக செல்வதும், சாகசங்களில் ஈடுபடுவதுமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!