News January 2, 2025

விக்கிரவாண்டியில் போக்குவரத்து நெரிசல்

image

கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பிய வாகனங்களால், நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகளவில் காணப்பட்டது. டோல்பிளாசாவில் வாகனங்கள் எளிதாக செல்ல 8 லேன்களும் திறக்கப்பட்டன. நேற்று (ஜன.1) இரவு 7 மணி வரை 30,000 வாகனங்கள் சென்னை நோக்கி சென்றன. விக்கிரவாண்டி டி.எஸ்.பி., நந்தகுமார் தலைமையிலான போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதி ஸ்தம்பித்து காணப்பட்டது.

Similar News

News September 17, 2025

மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <>லிங்கில்<<>> கிளிக் செய்து விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர்

News September 17, 2025

இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 16) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 16, 2025

விழுப்புரம்: மாவட்ட ஜூனியர் தடகளப் போட்டி துவக்கம்

image

விழுப்புரம் மாவட்டத்தில், 49-வது ஜூனியர் தடகளப் போட்டி, இன்று (செப்.16) துவங்கியது. விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 20 வயதிற்குட்பட்ட 1,500 மாணவர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட தடகள சங்கத் தலைவர் பொன்னுசாமி கார்த்திக், போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இதில், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன

error: Content is protected !!