News January 2, 2025

விக்கிரவாண்டியில் போக்குவரத்து நெரிசல்

image

கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பிய வாகனங்களால், நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகளவில் காணப்பட்டது. டோல்பிளாசாவில் வாகனங்கள் எளிதாக செல்ல 8 லேன்களும் திறக்கப்பட்டன. நேற்று (ஜன.1) இரவு 7 மணி வரை 30,000 வாகனங்கள் சென்னை நோக்கி சென்றன. விக்கிரவாண்டி டி.எஸ்.பி., நந்தகுமார் தலைமையிலான போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதி ஸ்தம்பித்து காணப்பட்டது.

Similar News

News November 15, 2025

விழுப்புரம்:ரயில்வேயில் 3058 காலி பணியிடம் அறிவிப்பு!

image

விழுப்புரம் மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்

News November 15, 2025

விழுப்புரம்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்!

image

விழுப்புரம் மக்களே.., இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். (SHARE IT)

News November 15, 2025

விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

விழுப்புரம் மாவட்டத்தில், ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களுக்கான ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம், வரும் டிச.12ஆம் தேதி காலை நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள், தங்களது மனுக்களை இரட்டை பிரதிகளில், உரிய இணைப்புகளுடன் வரும் நவ.26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!