News April 5, 2025
வாழ்வை பாசிட்டிவ் ஆக்கும் விகிர்தீஸ்வரர்!

வாழ்வில் பல்வேறு மன அழுத்தம், வெறுமை, சலிப்பு உள்ளவர்களின் எண்ணங்களை முன்னேற்றத்தை நோக்கி நகர்த்தும் கடவுளாக நம்பப்படுபவர் கரூர் மாவட்டத்தில் உள்ள விகிர்தீஸ்வரர். விகிர்தீஸ்வரர் என்றாலே நன்மை தருபவர் என்று அர்த்தம். இந்தக் கோயிலில் இவரை தரிசித்து விட்டுதிரும்பும் போது கூட படி ஏறி தான் செல்ல வேண்டும். அந்த தருணம் முதலே தரிசித்தவர் வாழ்க்கைப் படியும் ஏறுமாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News December 7, 2025
ஊரக திறனாய்வு தேர்வு:1,706 மாணவ, மாணவியர் பங்கேற்பு!

கரூர்:தமிழக அரசு தேர்வு இயக்ககத்தால்,ஊரக பகுதிகளில், 9ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு,ஊரக திறனாய்வு தேர்வு,1992 முதல் நடத்தப்பட்டு வருகிறது.வெற்றி பெறும் மானவர்களுக்கு ஆண்டிற்கு,1,000 ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.கரூர் மாவட்டத்தில்,9 மையங்களில்,1,811 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.அதில்,மொத்தம்,1,706 மாணவ,மாணவியர் தேர்வெழுதினர்.105 பேர்தேர்வுஎழுதவரவில்லை.
News December 7, 2025
கரூரில் சேவல் சண்டை; 2 பேர் அதிரடி கைது!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே வயலூர் நடுப்பட்டி சாலையில் கழுவூரான் தோட்டம் அருகே உள்ள சீத்தகாட்டில் அரசு அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் சேவல் சண்டை நடத்திய காதப்பறையை சேர்ந்த பழனிவேல், வாத்தி கவுண்டனூரைச் சேர்ந்த தர்மராஜன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 6 இருசக்கர மோட்டார் வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
News December 6, 2025
கரூர்: 4 வயது சிறுவன் கிணற்றில் விழ்ந்து பலி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனின் நான்கு வயது மகன் சுஜன், நண்பர்களுடன் ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள திருப்பதி என்பவரின் விவசாய கிணற்றில் மீன்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது தவறிவிழ்ந்து உயிரிழந்தார். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். நங்கவரம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வருகின்றனர்.


