News April 16, 2025

வாழ்வாதார உறுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு

image

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்கள் 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதிச் சான்றிதழை வரும் மே 2 முதல் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இச்சான்றிதழைகருவூலகத்திற்கு நேரில் வந்தோ (அ) தபால் அலுவலக சேவையை பயன்படுத்துவதன் வாயிலாகவோ பதிவு செய்யலாம். 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வுறுதிச் சான்றிதழை 30.05.2025க்குள் சமர்ப்பிக்கத் தவறினால் மேற்கொண்டு ஓய்வூதியம் வழங்க இயலாது என DAT இயக்குனர் அறிவித்துள்ளார்.

Similar News

News January 7, 2026

BREAKING: மாதம் ரூ.2,500 – புதுச்சேரி CM அறிவிப்பு

image

புதுச்சேரியில் வறுமை கோட்டிற்குள் கீழ் உள்ள சிவப்பு நிற குடும்ப‌ அட்டை வைத்துள்ள, குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் பத்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, வரும் ஜனவரி 12ம் தேதி முதல் உயர்த்தப்பட்ட உதவித்தொகை ரூ.2,500 வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் பொங்கலுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 7, 2026

புதுச்சேரி: ஆன்லைன் மோசடியில் ரூ.5.25 லட்சம் இழப்பு

image

முதலியார்பேட்டை பகுதியில் வசிக்கும் நபருக்கு, போலியான ஆர்.டி.ஓ. பெயரில் இ-செலான் லிங்க் வந்துள்ளது. அதனை நம்பி வங்கி விவரங்களை அதில் உள்ளிட்டதால், அவரது கணக்கில் இருந்து ரூ.3,64,718 பறிக்கப்பட்டது. இதேபோல் மதகடிப்பட்டு, வில்லியனூர், அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் ரூ.5,25,148 ஆன்லைன் மோசடியில் பொதுமக்கள் இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 7, 2026

புதுவை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

புதுச்சேரி மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!