News April 16, 2025
வாழ்வாதார உறுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்கள் 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதிச் சான்றிதழை வரும் மே 2 முதல் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இச்சான்றிதழைகருவூலகத்திற்கு நேரில் வந்தோ (அ) தபால் அலுவலக சேவையை பயன்படுத்துவதன் வாயிலாகவோ பதிவு செய்யலாம். 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வுறுதிச் சான்றிதழை 30.05.2025க்குள் சமர்ப்பிக்கத் தவறினால் மேற்கொண்டு ஓய்வூதியம் வழங்க இயலாது என DAT இயக்குனர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
புதுவை: சங்கராபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

புதுவை வில்லியனூர் தாசில்தார் சேகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சங்கராபரணி ஆற்றில் நீரோட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் வீடூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரினால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
புதுச்சேரி: ரூ.1,60,000 சம்பளத்தில் அரசு வேலை

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 05.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 4, 2025
புதுச்சேரி: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதற்கட்ட பரிசோதனை, வரும் டிசம்பர் 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில், இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


