News April 16, 2025
வாழ்வாதார உறுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்கள் 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதிச் சான்றிதழை வரும் மே 2 முதல் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இச்சான்றிதழைகருவூலகத்திற்கு நேரில் வந்தோ (அ) தபால் அலுவலக சேவையை பயன்படுத்துவதன் வாயிலாகவோ பதிவு செய்யலாம். 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வுறுதிச் சான்றிதழை 30.05.2025க்குள் சமர்ப்பிக்கத் தவறினால் மேற்கொண்டு ஓய்வூதியம் வழங்க இயலாது என DAT இயக்குனர் அறிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
புதுச்சேரி: தொழிற்சாலை ஊழியர் லாரி மோதி பலி

புதுச்சேரி, வில்லியனூர் அடுத்துள்ள பத்துகண்ணு பகுதியில் செங்கல் ஏற்றி வந்த மினி லாரி, தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர் ராஜா (35) என்பவரின் இரு சக்கர வாகனம் மீது மோதி, ராஜாவும் அவருடன் பயணித்த குழந்தையும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். இச்செய்தி அறிந்த பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றார்.
News October 15, 2025
புதுச்சேரி: கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை

புதுச்சேரி, லாஸ்பேட்டை சேர்ந்த ராஜேஷ் (48) எலெக்ட்ரீசியன் அவர் மனைவி விஜயகுமாரி (42), இருவரிடையே மனக்கசப்பு இருந்துள்ளது. விஜயகுமாரி அடிக்கடி செல்போனில் யாரிடமோ பேசியுள்ளார். இதை கணவர் ராஜேஷ், கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த விஜயகுமாரி வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News October 14, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர்ப்பு முகாம்

காரைக்காலில் மக்கள் குறை தீர்ப்பு முகாம், நாளை (15.10.2025) புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும். இந்த குறைதீர்ப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.