News August 14, 2024
வாழப்பாடியில் கவிழ்ந்த கார்: ஒருவர் பலி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன் பாளையம் அருகே நேற்று மாலை சேலம் நோக்கிச் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில் (43) என்பவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிர் இழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 2, 2025
சேலம் அரசு பள்ளி மாணவன் சாதனை!

அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான பளுதூக்கும் போட்டியில், சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவன் கபிலன், தமிழக அணியில் கலந்து கொண்டு 56 கிலோ எடை பிரிவில் போட்டியிட்டார். அவர் மொத்தம் 191 கிலோ எடையை தூக்கி மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். சேலம் மாணவனுக்கு ஆசிரியர்கள் மற்றும் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News December 2, 2025
சேலத்தில் கடன் தொல்லையால் நேர்ந்த சம்பவம்!

சேலம் அம்மாபேட்டை மாருதிநகர் 3வது கிராஸ் பகுதியில் வசிக்கும் சரவணன் (42) சலவை தொழில் செய்து வந்தார். ரூ.3 லட்சம் கடன் பிரச்சனையால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையடைந்த அவர் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார். அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 2, 2025
சங்ககிரி அருகே விபத்து இளைஞர் பலி!

சேலம் கரையான் காடு பகுதியைச் சேர்ந்தவர் நவீன்(21) வயதான இவர் சங்ககிரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது மேக்காடு அருகே ஜீப் ஒன்று எதிர்பாராத விதமாக நவீனின் பைக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தினர்.


