News June 12, 2024

வாளை காட்டி பணம் பறித்த இரண்டு பேர் கைது

image

தல்லாகுளம் முனியாண்டி கோவில் பகுதியில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (32) நின்று கொண்டிருந்தபோது கீழமேல்குடி பகுதியை சேர்ந்த ராகேஷ்(19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரும் தட்சிணாமூர்த்தியை வாளை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் ரூ.300 பறித்து சென்றதாக தட்சிணாமூர்த்தி மானாமதுரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்து இன்று விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 21, 2025

அரசு பேருந்து மோதியதில் முதியவர் உயிரிழப்பு

image

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(70). நேற்று திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது காரைக்குடியில் இருந்து தேனி செல்வதற்காக வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 20, 2025

சிவகங்கை: டிரைவர் காலிப்பணியிடம் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவர் காலிப்பணிக்கு பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான கடைசி தேதி ஏப்.30. ஊதியம் ரூபாய் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து அப்ளை செய்யலாம். LMV உரிமம் பெற்ற லைசன்ஸ் அவசியம். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு Share செய்து உதவிடுங்கள்.

News April 20, 2025

சிவகங்கை : அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 185 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவவும்.

error: Content is protected !!