News March 18, 2024

வாலிபரை தாக்கி லேப்டாப், பணம் பறிப்பு

image

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த அபியுதயா என்பவர் நண்பர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட 4 பேர் அபியுதயாவை தாக்கி 2 லேப்டாப், செல்போன், ரூ.2000 ஆகியவற்றை பறித்து சென்றனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News November 24, 2025

செங்கல்பட்டு: கிரேன் மோதி காவலாளி பலி

image

கூடுவாஞ்சேரி பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக பணிபுரிந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாசி (45), பணியில் இருந்தபோது பின்னால் இயக்கப்பட்டு வந்த கிரேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 24, 2025

செங்கல்பட்டு: ஒரே இரவில் 10க்கும் மேற்பட்ட ஆட்டோ-களில் திருட்டு

image

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், ஸ்டாலின் மற்றும் அண்ணா தெருக்களில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களின் டேஷ்போர்டுகளை உடைத்து, அதிலிருந்த சில்லரை பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். ஒரே இரவில் நடந்த இச்சம்பவம் குறித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஓட்டேரி குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

News November 24, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!