News March 18, 2024
வாலிபரை தாக்கி லேப்டாப், பணம் பறிப்பு

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த அபியுதயா என்பவர் நண்பர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட 4 பேர் அபியுதயாவை தாக்கி 2 லேப்டாப், செல்போன், ரூ.2000 ஆகியவற்றை பறித்து சென்றனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 12, 2025
செங்கல்பட்டு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊராட்சி செயல்களுக்கான காலி பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு இன்று ( டிசம்பர்-12) நடைபெறவிருந்த ஊராட்சி செயலாளர் பதவிற்கான நேர்காணல் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் நேர்காணலுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 52 ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
News December 12, 2025
செங்கல்பட்டு: டூவீலர், ஆட்டோ வாங்க ரூ.50,000 மானியம்

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <
News December 12, 2025
செங்கல்பட்டு: SBIல் சூப்பர் வேலை – ரூ.51,000 வரை சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, பாரத ஸ்டேட் வங்கிகளில் (SBI) customer relationship, executive உள்ளிட்ட 996 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.51,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் டிச.23ம் தேதிக்குள் இங்கே <


