News August 18, 2024

வாய்க்காலில் கிடந்த கணவன் உடல்: கரூர் அருகே அதிர்ச்சி

image

கரூர்: ரெங்கபாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமியை காணவில்லை என அவரது மனைவி ஜெயா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஜெயா புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சின்ன தாராபுரம் அருகே வாய்க்காலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினர் மூலம் உடல் மீட்கப்பட்டது. அது காணாமல் போன பொன்னுசாமி என்பது தெரியவந்தது.

Similar News

News December 5, 2025

பாலவிடுதி டாஸ்மாக் அருகே மது விற்றவர் கைது!

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா வீரனம்பட்டியை சேர்ந்த ராசு மகன் முருகன் (51). இவர் பாலவிடுதி டாஸ்மாக் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் மது விற்ற முருகன் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.

News December 5, 2025

கரூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

கரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 5, 2025

கரூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!