News March 29, 2024

வானூர் அருகே விபத்தில் வேன் ஓட்டுநர் பலி

image

வானூர், சின்னமுதலியார்சாவடியை சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் ஹரிதாஸ்(22). இவர் நேற்று முன்தினம் மொரட்டாண்டி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது குமாரி என்ற பெண் மீது பைக் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். பின்னர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் ஹரிதாஸ் உயிரிழந்தார். இது குறித்து ஆரோவில் போலீசார் நேற்று(மார்ச் 28) வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News October 28, 2025

விவசாயிகள் அக்டோபர் மாத குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டம், விவசாயிகள் அக்டோபர் மாத குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 31.10.2025 அன்று காலை 11.00 மணியளவில் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிகளும், விவசாயிகளும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News October 27, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.27) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 27, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.30,000 சம்பளத்துடன் அரசு வேலை!

image

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். ஆரம்பக்கட்ட சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும். வயது வரம்பு: 20 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அக்.29-ம் தேதிக்குள் <>இந்த லிங்கின் <<>> மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!