News September 14, 2024
வானகரம் – நெற்குன்றம் இடையே போக்குவரத்து நெரிசல்

வானகரம் – நெற்குன்றம் இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், தொடர் விடுமுறையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதால், சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. பல மணி நேரங்களாக வாகனங்கள் நகராமல் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதோடு, ஊர்ந்தபடி வாகனங்கள் செல்கின்றன.
Similar News
News November 23, 2025
சென்னை: LICENSE வைத்திருப்போர் கவனத்திற்கு!

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, இங்கே<
News November 23, 2025
சென்னை உயர்நீதிமன்ற வாயில்கள் மூடல்

சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் சனிக்கிழமை (நவ.22) இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ.23) இரவு 8 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் உயர்நீதிமன்றத்தை வழிப்பாதையாக பயன்படுத்தி உரிமை கோரவிடாமல் இருக்க இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்கள் யாருக்கும் நுழைவு அனுமதி இல்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 23, 2025
சென்னை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.


