News August 7, 2024

வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…

image

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சிபிஐ தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், சிபிஐ சின்னத்தையும், அதிகாரிகள் பெயர்களையும் பயன்படுத்தி மர்ம நபர்கள் போலி ஆவணம் தயாரித்து சம்மன் அனுப்புவதாகவும், வாட்ஸ்அப் அழைப்பு மேற்கொண்டு மிரட்டி பணம் பறிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆதலால் போலி நபர்களிடம் ஏமாறாமல் இருக்க மக்கள் விழிப்புடன் இருக்கும்படி சிபிஐ அறிவுறுத்தியுள்ளது. PLS SHARE IT

Similar News

News February 7, 2026

ஷேவிங் செய்யும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க

image

➤ரேசரை சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவது ➤ஒரே ரேசரை மாதக்கணக்கில் பயன்படுத்துவது ➤மேல் நோக்கி ஷேவ் செய்வது ➤சோப்பை போட்டு ஷேவ் செய்வது ➤அதிக அழுத்தம் கொடுத்து ஷேவ் செய்வது ➤ஷேவ் செய்த பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தாமல் இருப்பது. இதுபோன்ற தவறுகளை செய்தால் காயம், எரிச்சல், அரிப்பு, வறட்சியில் இருந்து தொடங்கி, நோய்த்தோற்று ஏற்படலாம். இதில் நீங்க எந்த தப்ப பண்றீங்க?

News February 7, 2026

தேர்தலில் TN vs NDA இடையே தான் போட்டி: ஸ்டாலின்

image

துரோகிகளும் எதிரிகளும் சேர்ந்து ஒட்டுமொத்த TN-ன் சுயமரியாதையை அடகுவைக்க பார்க்கிறார்கள் என விருதுநகரில் ஸ்டாலின் பேசியுள்ளார். வரும் தேர்தலில் TN-க்கும், NDA-க்கும் இடையே தான் போட்டி எனக் கூறிய அவர், இளைஞரணியின் ஆதரவு தொடர்ந்து இருந்தால் திமுகவை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது எனத் தெரிவித்தார்.

News February 7, 2026

வீட்டிலிருந்தே ஆதார் எண்ணை இணைக்கலாம்!

image

கேஸ் நுகர்வோர் அனைவரும் ஆதார் e-KYC-ஐ பூர்த்தி செய்ய வேண்டும் என்று மத்திய இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே 75% பேர் இந்த செயல்முறையை முடித்துவிட்டதாகவும், மீதமுள்ளவர்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வீட்டிலிருந்தே இலவசமாக KYC-ஐ பூர்த்தி செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <>https://pmuy.gov.in/e-kyc.html<<>> இணையதளத்தை அணுகவும். மேலும் விவரங்களுக்கு 18002333555 அழைக்கவும்.

error: Content is protected !!