News August 7, 2024
வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சிபிஐ தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், சிபிஐ சின்னத்தையும், அதிகாரிகள் பெயர்களையும் பயன்படுத்தி மர்ம நபர்கள் போலி ஆவணம் தயாரித்து சம்மன் அனுப்புவதாகவும், வாட்ஸ்அப் அழைப்பு மேற்கொண்டு மிரட்டி பணம் பறிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆதலால் போலி நபர்களிடம் ஏமாறாமல் இருக்க மக்கள் விழிப்புடன் இருக்கும்படி சிபிஐ அறிவுறுத்தியுள்ளது. PLS SHARE IT
Similar News
News November 21, 2025
மயிலாடுதுறை: ஆட்சியர் கொடுத்த அப்டேட்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்பப் பெரும் பணி நடந்து வருகிறது. அனைத்து படிவங்களும் திரும்ப பெறப்பட்டு தேர்தல் ஆணைய செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உரிய முறையில் வரைவு வாக்காளர் பட்டியல் டிச.9-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதில் கோரிக்கை, மறுப்புகள் பெறப்பட்டு இறுதிவாக்காளர் பட்டியல் 2026 பிப்.7-ம் தேதி வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
3 மாதங்களுக்கு ஸ்ரேயஸ் பேட்டை தொடக்கூடாதாம்

மண்ணீரல் காயம் காரணமாக இந்திய ODI துணை கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், அடுத்த 2 – 3 மாதங்களுக்கு விளையாட வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால், இம்மாத இறுதியில் நடைபெறும் SA-வுக்கு எதிரான ODI தொடர் மற்றும் டிசம்பரில் நடக்கும் NZ-க்கு எதிரான ODI தொடரில் அவர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
News November 21, 2025
நகைக் கடன் தள்ளுபடியா? தமிழக அரசு திட்டம்

2021-ஐ போலவே 2026 பேரவைத் தேர்தலிலும் கூட்டுறவு நிறுவனங்களில் நகைக் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இதனிடையே, 31.03.21 வரை நகைக் கடன் பெற்றிருந்த 11.70 லட்சம் பயனாளிகளுக்கு நிலுவையில் இருந்த ₹6,000 கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. தற்போது நிலுவையில் உள்ள நகைக் கடன்கள் எவ்வளவு என்ற பட்டியலை வழங்க அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாம்.


