News August 7, 2024
வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சிபிஐ தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், சிபிஐ சின்னத்தையும், அதிகாரிகள் பெயர்களையும் பயன்படுத்தி மர்ம நபர்கள் போலி ஆவணம் தயாரித்து சம்மன் அனுப்புவதாகவும், வாட்ஸ்அப் அழைப்பு மேற்கொண்டு மிரட்டி பணம் பறிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆதலால் போலி நபர்களிடம் ஏமாறாமல் இருக்க மக்கள் விழிப்புடன் இருக்கும்படி சிபிஐ அறிவுறுத்தியுள்ளது. PLS SHARE IT
Similar News
News December 9, 2025
உலகக் கோப்பை ஸ்குவாஷ்: 3 தமிழக வீரர்கள் பங்கேற்பு

சென்னையில் இன்று முதல் டிச.14 வரை 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இதற்கான கோப்பையை DCM உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். இந்தியா, ஜப்பான், மலேசியா, எகிப்து உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணியில் அனாஹத் சிங், தமிழகத்தை சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங், வேலவன் செந்தில் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
News December 9, 2025
குக் வித் கோமாளி பிரபலத்தை மணக்கிறாரா பிக்பாஸ் ஜூலி?

ஜூலிக்கு கடந்த வாரம் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இது தொடர்பான போட்டோக்களை அவர் வெளியிட, எதிலுமே மாப்பிள்ளையின் முகம் இல்லை. எனவே, யார் அவர் என அனைவரும் தேடத்தொடங்கிவிட்டனர். இந்நிலையில், அவர் பெயர் முகமது இக்ரீம் எனவும், குக் வித் கோமாளி, ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சிகளில் ஷோ ஏற்பாட்டாளராக பணியாற்றி இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இதுபற்றி Official தகவல் வரவில்லை.
News December 9, 2025
விஜய் பொதுக்கூட்டத்தில் துப்பாக்கியுடன் சிக்கிய நபர்

புதுச்சேரியில் விஜய் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்திற்கு வருவோரை போலீசார் சோதனை செய்தபோது, துப்பாக்கியுடன் வந்த நபர் பிடிபட்டுள்ளார். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக கரூர் துயர சம்பவத்தின்போது ‘Y’ பிரிவு பாதுகாப்பை மீறி விஜய் மீது வாட்டர் பாட்டில் வீசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.


