News May 15, 2024
வாசிங் மெஷினை கடை முன்பு எரிக்க முயற்சி

திருவல்லிக்கேணி சத்தியவாணி முத்து நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் அண்ணா சாலையில் உள்ள பிரபல ஷோரூமில் வாசிங் மெஷினை 7 மாதத்திற்கு முன்பு வாங்கியுள்ளார். அது அடிக்கடி பழுதான நிலையில் வேறு வாசிங் மெஷினை கேட்டுள்ளார். சர்வீஸ் செய்து தருவதாக கூறிய நிலையில், ஆத்திரமடைந்த இளம்பெண் அந்த கடை முன்பு வாசிங் மெஷினை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்றார். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News October 28, 2025
சென்னை: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

சென்னை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News October 28, 2025
MONTHA: சென்னையில் மழை தொடரும்..!

சென்னையிலிருந்து 400 கி.மீ தூரத்தில் மோன்தா புயல் நிலைகொண்டுள்ளது. இந்நிலையில் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு அதிகபட்சமாக 90- 110 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னையில் மழை தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 28, 2025
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்!

கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் அக்.31-ம் தேதி காலை 10 முதல் மதியம் 2 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை தேடுவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.


