News May 15, 2024
வாசிங் மெஷினை கடை முன்பு எரிக்க முயற்சி

திருவல்லிக்கேணி சத்தியவாணி முத்து நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் அண்ணா சாலையில் உள்ள பிரபல ஷோரூமில் வாசிங் மெஷினை 7 மாதத்திற்கு முன்பு வாங்கியுள்ளார். அது அடிக்கடி பழுதான நிலையில் வேறு வாசிங் மெஷினை கேட்டுள்ளார். சர்வீஸ் செய்து தருவதாக கூறிய நிலையில், ஆத்திரமடைந்த இளம்பெண் அந்த கடை முன்பு வாசிங் மெஷினை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்றார். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 11, 2025
சென்னை: திருமாவளவன் பேனரால் சர்ச்சை

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தை கட்சி, சென்னை மிண்ட் தங்கசாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் தலைவர் தொல் திருமாவளவனை “வருங்கால முதல்வர்” எனக் குறிப்பிடும் பேனர் வைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
News November 11, 2025
சென்னை: லைசன்ஸ் இல்லையென்ற கவலை இனி இல்லை

சென்னையில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.
News November 11, 2025
SIR: சென்னையில் 40% பணி முடிந்தது

சென்னை, 2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) ஒரு பகுதியாக, திங்கட்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 40.8% வாக்காளர்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரம் மற்றும் திரு.வி.கா. நகரில் விநியோகம் குறைவாக நடந்ததாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.


