News April 15, 2024

வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

image

மக்களவைப் பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எம்.சரயு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர்.

Similar News

News November 23, 2025

கிருஷ்ணகிரி: HOUSE OWNER பிரச்சனையா? இத பண்ணுங்க!

image

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News November 23, 2025

ஓசூர்: ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்

image

ஓசூர் அடுத்த சூளகிரி பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சீதாராமன் (34), நிலம் வாங்க வேண்டும் என பெண் ஒருவர் அழைத்ததால் பத்தலப்பள்ளி சென்றார். அங்கு ஏழு பேர் கும்பல் கடத்தி 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர். பின், சீதாராமன் நண்பருக்கு லொகேஷன் அனுப்பியதால், போலீசார் சூடசந்திரம் பகுதியில் ரோந்து வைத்து நான்கு பேரை கைது செய்து சீதாராமனை பத்திரமாக மீட்டனர். மற்ற மூவரை தேடி வருகின்றனர்.

News November 22, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் வெளியீடு!

image

கிருஷ்ணகிரி, இரவு ரோந்து செலும் காவலர்கள் 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பணியில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!